News August 3, 2024

ஆவின் முகவர்களாக விண்ணப்பிக்கலாம்

image

கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி, வடலூர், காட்டுமன்னார்கோயில், ஸ்ரீமுஷ்ணம், வேப்பூர், பெண்ணாடம், திட்டக்குடி, குறிஞ்சிப்பாடி, புவனகிரி ஆகிய பகுதிகளுக்கு ஆவின் முகவர்கள், மொத்த விற்பனையாளர்கள் மற்றும் பாலக முகவர்கள் தேவைப்படுகின்றனர். எனவே விருப்பமுள்ளவர்கள் மாவட்ட கூட்டுறவு பால்உற்பத்தியாளர்கள் ஒன்றியத்திற்கு நேரில் வந்து விண்ணப்பிக்கலாம் என ஆவின் பொதுமேலாளர் தெரிவித்தார்.

Similar News

News November 1, 2025

கடலூர்: கறவை மாடு வாங்க ரூ.1.2 லட்சம் கடன்!

image

தமிழக அரசின் TABCEDCO மூலம் ஒரு பயனாளிக்கு, 2 கறவை மாடுகள் வாங்க ரூ.1,20,000 கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த கடனை திருப்பி செலுத்த 3 ஆண்டுகள் கால அவகாசம் உண்டு. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <>tabcedco.net<<>> என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து கொள்ளலாம். குறிப்பு: கடனுதவி பெற மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

News November 1, 2025

கடலூர்: தேர்வு இல்லாமல் வங்கி வேலை

image

கடலூர் மக்களே, நபார்டு வங்கியில் (NABARD) பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12-வது தேர்ச்சி பெற்ற 18-33 வயதுகுட்பட்டவர்கள் இங்கு கிளிக் செய்து நவ.15-க்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.20,000 – ரூ.30,000 வரை வழங்கப்படும். இதற்கு தேர்வு கிடையாது. நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பமுள்ளவர்கள் nabfins.org/Careers எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்லாம்.

News November 1, 2025

கடலூர்: 12 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது

image

பண்ருட்டியை சேர்ந்தவர் கார்த்தி (31). கடந்த 2013-ம் ஆண்டு திருட்டு வழக்கில் கைதான கார்த்தி, ஜாமீனில் வந்தார். பிறகு வழக்கு விசாரணைக்கு பண்ருட்டி கோர்ட்டில் ஆஜராகாமல் 12 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தார். எனவே அவருக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து பண்ருட்டி போலீசார், அவரை தேடி வந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் கம்மசெட்டி சத்திரத்தில் வசித்த கார்த்தியை நேற்று போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!