News September 1, 2025

ஆவின் பால் முகவர்கள் உரிமம் – புதுப்பிக்க அறிவிப்பு

image

கோவை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் 635 சில்லறை பால் விற்பனை முகவர்களில் 333 பேர் மட்டுமே இதுவரை உரிமத்தை புதுப்பித்துள்ளனர். மீதமுள்ள முகவர்கள் வருகிற 10-ந்தேதிக்குள் உரிமத்தை புதுப்பிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் பவன்குமார் தெரிவித்துள்ளார். 11-ந்தேதியிலிருந்து உரிமம் புதுப்பிக்காத முகவர்களுக்கு கமிஷன் வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News September 1, 2025

கோவை மாவட்டம் உருவான வரலாறு!

image

கோவன் என்ற பழங்குடியின தலைவன் ஆண்ட பகுதி கோவன் புத்தூர் என அழைக்கப்பட்டது. பின்னர் அது மருவி கோயம்புத்தூர் என பெயர் பெற்ற கூறப்படுகிறது .ஆங்கிலேயர்கள் நிர்வாக வசதிக்காக 1804ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் தேதியன்று கோயம்புத்தூர் மாவட்டத்தை உருவாக்கினர். அதன் பின் 1866ஆம் ஆண்டில் கோவை நகராட்சியாக தரம் உயர்ந்தது. கொங்கு மண்டலத்தின் இதயமென அழைக்கப்படுவது கோவை என்றால் மிகையாகாது.(SHARE பண்ணுங்க)

News September 1, 2025

ஆன்லைன் முதலீடு மோசடி: ரூ.71 லட்சம் இழந்த முதியவர்

image

கோயம்புத்தூர், குனியமுத்தூரைச் சேர்ந்த முருகேசன் (62) என்பவரிடம், சஞ்சய் ரெட்டி மற்றும் லாவண்யா ஆகியோர் ஆன்லைன் முதலீட்டில் அதிக லாபம் தருவதாகக் கூறி ரூ.71 லட்சத்தைப் பெற்றுள்ளனர். ஆனால், சொன்னபடி பணத்தைத் திரும்பத் தராமல் ஏமாற்றி வந்துள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான முருகேசன் நேற்று குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, இருவரையும் தேடி வருகின்றனர்.

News September 1, 2025

துப்பாக்கியுடன் 2 பேர் கைது – 18 தோட்டாக்கள் பறிமுதல்

image

சூலூர் சுகந்தி நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவரது மனைவி மேரி ஜூலியானா பெட்டிக்கடை நடத்தி வருகிறார். கடந்த 28ஆம் தேதி இவரது கடைக்கு சிகரெட் வாங்குவது போல் வந்த இருவர் அவரை தலையில் சுத்தியால் தாக்கி விட்டு 4 சவரன் தங்க நகைகளை பறித்து சென்றனர். இவ்வழக்கில் சூலூர் போலீசார் குணசேகரன், விஜயகுமார் சாணி உள்ளிட்ட இருவரை பிடித்து விசாரித்ததில் துப்பாக்கி, 18 தோட்டாக்களை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!