News May 29, 2024

ஆவின் நிறுவன ஓட்டுநர்களின் போராட்டம் வாபஸ்

image

திருச்சி கொட்டப்பட்டு நிறுவனத்தில் ஒப்பந்த முறையில் செயல்படும் வேன்களுக்கான வாடகை சுமார் இரண்டு மாதமாக நிலுவையில் இருந்ததால் வேன் உரிமையாளர்கள் இன்று காலை திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 80 லட்சம் லிட்டர் பால் விநியோகம் தடைபட்டது. இந்த நிலையில் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையின் முடிவில் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். இன்று மாலை வழக்கம் போல் பால் விநியோகம் தொடரும் என தெரிவித்தனர்.

Similar News

News September 10, 2025

திருச்சியில் நடக்கும் இலவச வகுப்பு, கலெக்டர் அறிவிப்பு!

image

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்படவுள்ள இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்துத் தேர்வு அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது. இதற்கான இலவச பயிற்சி வகுப்பு திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் வரும் 15ம் தேதி காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது. இதில் திருச்சியை சேர்ந்த இளைஞர்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார். SHARE பண்ணுங்க!

News September 10, 2025

திருச்சி: திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு

image

திருச்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நாளை (செப்.10) நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் புள்ளம்பாடி ஒன்றியத்திற்கு கீழரசூர் பகுதிகளிலும், தா.பேட்டை ஒன்றியத்திற்கு கரிகாலி பகுதியிலும், தொட்டியம் ஒன்றியத்திற்கு கோடியம்பாளையம் பகுதியிலும், துறையூர் ஒன்றியத்திற்கு முருகூர் பகுதியிலும் முகாம் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு மனு அளிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News September 9, 2025

திருச்சி: விவசாயிகளுக்கு மாநில அளவிலான விருது

image

திருச்சி மாவட்டத்தில் வேளாண் சாகுபடிக்கான நவீன தொழில்நுட்ப கருவிகளை கண்டுபிடித்த சிறந்த விவசாயிகளுக்கு மாநில அளவில் விருதுகள் வழங்கப்பட உள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் விவசாயிகள் தங்களது பெயரை உழவர் செயலி மூலம் பதிவு செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை, பதிவு கட்டணம் ரூ.150 சேர்த்து வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் வழங்க வேண்டும் என மாவட்ட வேளாண் இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!