News May 18, 2024
ஆவடி: ரயில் மோதி ஓட்டுநர் பலி

ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த தனியார் பேருந்து ஓட்டுனர் நித்யானந்தா (43). இந்நிலையில் நேற்று மாலை நித்யானந்தா ஆவடி ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த மின்சார ரயில் அவர் மீது மோதியதில் ரயில் சக்கரத்தில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே நித்யானந்தா உயிரிழந்தார். புகாரின் பேரில் ஆவடி ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News March 10, 2026
திருவள்ளூர் மாவட்டம் இரவு ரோந்து காவல் விவரம்

திருவள்ளூர் மாவட்ட காவல் துறை சார்பில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது.பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதி செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும்.மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.
News March 10, 2026
மாற்றுத்திறனாளிகளிடம் பெறப்பட்ட கோரிக்கை மனு!

திருவள்ளுர் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இன்று (மார்ச்.9) வருவாய் அலுவலர் சு.சுரேஷ், மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு அதற்கு தீர்வுக்கான சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் உத்திரவிட்டார். உடன் தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) , மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.
News March 10, 2026
திருவள்ளூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

இன்று மார்ச்.9 திருவள்ளுர் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் சு.சுரேஷ், பொதுமக்களிடம் இருந்து பல்வேறு வகையான 500 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, அதற்கு உரிய தீர்வுக்கான சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் உத்திரவிட்டார். உடன் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வெங்கட்ராமன், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) வெங்கடேசன் உள்ளிட்டோர் உள்ளனர்.


