News October 5, 2025
ஆவடி: கொத்தாக தூக்கிய திமுக

புரட்சி பாரதம் கட்சியில் இருந்து விலகி, அக்கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் தூத்துக்குடி ஆனந்தன் மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகள் 200-க்கும் மேற்பட்டோர் ஆவடியில் நேற்று அமைச்சர் நாசர் முன்னிலையில் திமுக-வில் இணைந்தனர். பின்னர் குழு புகைப்படம் எடுத்து கொண்டனர். உடன் திருவள்ளூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பிரேம் ஆனந்த், ஆவடி மாநகர மேயர் உதயகுமார் (ம) கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News October 31, 2025
திருவள்ளூர்: ரயில்வேயில் 5,810 பணியிடங்கள்- APPLY HERE!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 5,810 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி
3. ஆரம்ப நாள்: 21.10.2025
4. கடைசி தேதி : 20.11.2025
5. சம்பளம்: ரூ.25,500 – ரூ.35,400
6. வயது வரம்பு: 18 – 33 (SC/ST – 38, OBC – 36)
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<
News October 31, 2025
திருவள்ளூர் மாணவர்களுக்கு GOOD NEWS!

திருவள்ளுர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் அனைத்து போட்டித்தேர்வுகளுக்கும் மாணவர்களை தொடர்ச்சியாக தயார்படுத்தும் வகையில் ஒருங்கிணைந்த கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் (நவ.05) அன்று காலை 10.30 மணிக்கு துவக்கப்படவுள்ளது. மேலும் விவரங்களுக்கு 8489866698, 9626456509 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News October 31, 2025
திருவள்ளூர்: இன்று காலை திருமணம்…மணமகள் பலி

திருத்தணி அருகே மணமகன் வீட்டில் மணமகள் மர்மமான முறையில் நேற்று உயிரிழந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. அத்திமாஞ்சேரிபேட்டை சேர்ந்த மணிக்கும் ஆந்திராவை சேர்ந்த சந்தியாவுக்கு இன்று திருமணம் நடைபெற இருந்தது. மணமகன் வீட்டு குளியலறையில் சந்தியா மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளார். இன்று காலை திருமணம் நடைபெறவிருந்த நிலையில் மணமகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


