News August 24, 2024
ஆவடியில் 6 பேருக்கு அடுத்தடுத்து டெங்கு காய்ச்சல்

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் 6 பேருக்கு அடுத்தடுத்து டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். டெங்கு உறுதியான 6 பேரில் 3 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், டெங்குவை பரப்பும் கொசுக்களை ஒழிக்கும் பணிகளில் மாநகராட்சி பணியாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
Similar News
News September 9, 2025
திருவள்ளூர்: உளவுத்துறை வேலை விண்ணப்பிப்பது எப்படி?

▶️ உளவுத்துறையில் காலியாக உள்ள 394 பணியிடங்களுக்கு https://www.mha.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம்
▶️ இதில்மாதம் ரூ.25,500 – ரூ.81,100 வரை சம்பளம் வழங்கப்படும்
▶️ BA,BSc,BE,B.TECH படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
▶️ஆன்லைன் தேர்வு, எழுத்துத் தேர்வு,நேர்காணல் என 3 தேர்வுகள் நடைபெறும்.
▶️ விண்ணப்பிக்க செப்.14 கடைசி நாளாகும்.
▶️ இதனை வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க
News September 9, 2025
திருவள்ளூர்: கேன் வாட்டர் குடிக்கிறீங்களா! அதிரடி உத்தரவு

தமிழகம் முழுவதும் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வந்த நிலையில், திருவள்ளூரில் உள்ள கேன் வாட்டர் ஆலைகளை ஆய்வு செய்ய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். நிறுவனத்தின் பெயர், தாயரிப்பு தேதி, காலாவதியான தேதி உள்ளிட்டவை இடம்பெற வேண்டும், விதிகளை பின்பற்றாத கடைகளுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என்றனர். மக்களே, கேன் வாட்டர் வாங்கும் போது செக் பண்ணி வாங்குங்க. (SHARE)
News September 9, 2025
திருவள்ளூர் கலெக்டர் அறிவிப்பு

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள சுமார் 2 லட்சம் கால்நடைகளுக்கு தோல்கழலை நோய் தடுப்புத் திட்டத்திற்கான பூஸ்டர் தடுப்பூசிப்பணி 03.09.2025 முதல் 30.09.2025 வரை மேற்கொள்ளப்படவுள்ளது. எனவே, கால்நடை உரிமையாளர்கள் தங்களது பசுக்கள், எருமைகள், எருதுகள் மற்றும் 4 மாதத்திற்கு மேற்பட்ட இளங்கன்றுகள் ஆகியவற்றிற்கு இத்தடுப்பூசியினை தவறாது போட்டு கொள்ளுமாறு கலெக்டர் பிரதாப் தெரிவித்துள்ளார். (ஷேர் பண்ணுங்க)