News February 24, 2026
ஆவடியில் 3 போலீஸ் அதிரடி மாற்றம்!

திருவள்ளூர்; ஆவடி போலீஸ் ஆணையகரத்தில் பணியாற்றி வந்த 3 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதுபடி, நுண்ணறிவு பிரிவில் பணியாற்றி வந்த லாரன்ஸ், திருநின்றவூர் போலீஸ் இன்ஸ்பெக்டராகவும், திருநின்றவூர் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் , காட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டராகவும், காட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய் கிருஷ்ணராஜ், நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
Similar News
News February 25, 2026
திருவள்ளூர்: பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

திருவள்ளூர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட சேவைகள் மையம் இயங்கி வருகிறது. இங்கு சட்ட ஆலோசனை மற்றும் வழக்குகளுக்கான உதவிகளை இலவசமாக பெறலாம். திருவள்ளூர் மாவட்ட இலவச சட்ட உதவி மையம் – 044-27660120, (தமிழ்நாடு) அவசர உதவி – 044–25342441, TOLL FREE – 1800 4252 441, சென்னை ஐகோர்ட் – 044-29550126, ஐகோர்ட் மதுரை கிளை – 0452-2433756 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். *நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க*
News February 25, 2026
திருத்தணிக்கு புதிய பஸ் ஸ்டாண்ட் !

திருவள்ளூர்: திருத்தணியில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் 4.50 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள புதிய நவீன பேருந்து நிலையம் நாளை திறக்கப்படுகிறது. அரசு போக்குவரத்து பணிமனை அருகே நகராட்சி நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்ட இந்த நிலையத்தின் இறுதிக்கட்ட பணிகளை விரைந்து முடிக்க கலெக்டர் பிரதாப் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். புதிய பேருந்து நிலையம் பயணிகளுக்கு மேம்பட்ட வசதிகளை வழங்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
News February 25, 2026
திருவள்ளூர்: ரயிலில் பயணிக்கும் பெண்கள் கவனத்திற்கு!

பாலியல் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால், ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்கள், ரயில்களில் அல்லது ரயில் நிலையங்களில் பாலியல் சீண்டல்களை எதிர்கொண்டால் 9962500500 என்ற எண்ணுக்கு உடனே அழைக்கவும். ரயில்வே காவல் உதவி எண் 1512 என்ற எண்ணுக்கும் தொடர்பு கொள்ளலாம். தனியாக செல்லும் பெண்கள் இந்த நம்பர்களை உங்கள் மொபைலில் கட்டாயம் வைத்து கொள்ளுங்கள். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


