News August 11, 2024
ஆவடியில் விஷ வாயு தாக்கி தொழிலாளர் உயிரிழப்பு

சென்னை அடுத்த ஆவடி மாநகராட்சியில் ஒப்பந்த தொழிலாளர் கோபிநாத் என்பவர் பாதாள சாக்கடைக்குள் இறங்கி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது, விஷ வாயு தாக்கியதில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை மீட்டு ஆவடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஜனவரி மாதம் ஒருவரும், கடந்த ஆண்டு ஒருவரும் ஆவடி மாநகராட்சியில் இதேபோல் பலியானது குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 4, 2026
சென்னையில் டெலிவரி ஊழியருக்கு சரமாரி கத்திக்குத்து

சென்னை புளியந்தோப்பில் டெலிவரி ஊழியராக வேலை செய்யும் தினேஷ் (26) மீது முன்விரோதம் காரணமாக நண்பர் கடப்பா செந்தில் உள்ளிட்ட 3 பேர் கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். காயமடைந்த தினேஷ் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புளியந்தோப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, ராஜமாணிக்கம் (28), செந்தில் (26) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News March 4, 2026
குஜராத் வரை சென்று அதிரடி காட்டிய சென்னை போலீஸ்!

சென்னை பூக்கடை ரெட்டி ராம் தெருவில் ஜன.25 ஆம் தேதி கடை ஷட்டர் பூட்டை உடைத்து, ரமேஷ்குமார் ஜெயின் (55) கடையில் ₹1,30,000 மற்றும் எதிர்கடையில் ₹65,000 திருடப்பட்டதாக C-1 பூக்கடை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. சிசிடிவி பதிவுகள் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களில் பதுங்கியிருந்த ஈஸ்வர் (42), கன்பத் சிங் (38) ஆகிய இருவரை நேற்று கைது செய்தனர்.
News March 4, 2026
விரைவில் வேளச்சேரி – பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை!

சென்னை பிரிவில் புதிதாக கட்டப்பட்ட வேளச்சேரி – பரங்கிமலை பறக்கும் ரயில் பாதைகளை தில்லி ரயில்வே பாதுகாப்பு தலைமை ஆணையர் ஜனக் குமார் கார்க் மார்ச் 5ஆம் தேதியன்று ஆய்வு மேற்கொள்ள உள்ளார். அதே நாள் மதியம் 1.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை அதிவேக சோதனை ஓட்டமும் நடைபெறும். மேலும், மார்ச் 10 முதல் இந்த வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.


