News August 22, 2024
ஆவடியில் இன்று மின்தடை

ஆவடி சுற்றுவட்டார பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (ஆக.22) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படவுள்ளது. அதன்படி, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, காமராஜர் நகர், ஆவடி மார்க்கெட், அண்ணாமலை நகர், கௌரிபேட்டை, ஜெ.பி எஸ்டேட், வசந்தம் நகர் கோவர்த்தனகிரி, பருத்திப்பட்டு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
Similar News
News September 9, 2025
திருவள்ளூர்: உளவுத்துறை வேலை விண்ணப்பிப்பது எப்படி?

▶️ உளவுத்துறையில் காலியாக உள்ள 394 பணியிடங்களுக்கு https://www.mha.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம்
▶️ இதில்மாதம் ரூ.25,500 – ரூ.81,100 வரை சம்பளம் வழங்கப்படும்
▶️ BA,BSc,BE,B.TECH படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
▶️ஆன்லைன் தேர்வு, எழுத்துத் தேர்வு,நேர்காணல் என 3 தேர்வுகள் நடைபெறும்.
▶️ விண்ணப்பிக்க செப்.14 கடைசி நாளாகும்.
▶️ இதனை வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க
News September 9, 2025
திருவள்ளூர்: கேன் வாட்டர் குடிக்கிறீங்களா! அதிரடி உத்தரவு

தமிழகம் முழுவதும் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வந்த நிலையில், திருவள்ளூரில் உள்ள கேன் வாட்டர் ஆலைகளை ஆய்வு செய்ய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். நிறுவனத்தின் பெயர், தாயரிப்பு தேதி, காலாவதியான தேதி உள்ளிட்டவை இடம்பெற வேண்டும், விதிகளை பின்பற்றாத கடைகளுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என்றனர். மக்களே, கேன் வாட்டர் வாங்கும் போது செக் பண்ணி வாங்குங்க. (SHARE)
News September 9, 2025
திருவள்ளூர் கலெக்டர் அறிவிப்பு

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள சுமார் 2 லட்சம் கால்நடைகளுக்கு தோல்கழலை நோய் தடுப்புத் திட்டத்திற்கான பூஸ்டர் தடுப்பூசிப்பணி 03.09.2025 முதல் 30.09.2025 வரை மேற்கொள்ளப்படவுள்ளது. எனவே, கால்நடை உரிமையாளர்கள் தங்களது பசுக்கள், எருமைகள், எருதுகள் மற்றும் 4 மாதத்திற்கு மேற்பட்ட இளங்கன்றுகள் ஆகியவற்றிற்கு இத்தடுப்பூசியினை தவறாது போட்டு கொள்ளுமாறு கலெக்டர் பிரதாப் தெரிவித்துள்ளார். (ஷேர் பண்ணுங்க)