News June 18, 2024
ஆழியார் அணைக்கு 15000 சுற்றுலா பயணிகள் வருகை

ஆழியாறுக்கு விடுமுறை நாட்களில், அதிகமான சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர்.
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலாப் பயணியர் பூங்காவிற்கு வந்தனர். பூங்கா வழியாக செல்லும் தண்ணீரில் நீண்ட நேரம் குளித்து மகிழ்ந்தனர். கடந்த 3 தினங்களில் மட்டும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் ஆழியாறு அணை மற்றும் பூங்காவிற்கு வந்து சென்றனர் என நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Similar News
News August 16, 2025
கோவை : இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (15.08.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News August 15, 2025
கோவையில் இலவச Tally பயிற்சி!

கோவையில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச Tally Certified Accountant with GST பயிற்சி வழங்கப்படவுள்ளது. 20 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், Tally தொடர்பாக அனைத்து நுட்பங்களும் கற்றுத்தரப்படவுள்ளது. இதில் பயிற்சி பெறுபவர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க <
News August 15, 2025
கோவை காவல்துறை அறிவிப்பு

கோவையில் மகளிர் பாலிடெக்னிக் அருகில் இயங்கி வந்த, Sunmus என்ற நிறுவனத்தின் மீதும், அதன் CEO ஆக இருந்த சிவராமகிருஷ்ணன் மீது 27.05.2024 ஆம் தேதி கோவை பொருளாதார குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நிறுவனத்தில் முதலீடு செய்து பணம் கிடைக்காமல் ஏமாற்றப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் என கோவை மாநகர பொருளாதார காவல் துறையினர் தெரிவித்துள்ளது.