News September 10, 2025

ஆளுநர் மாளிகையில் நவராத்திரி விழா

image

கிண்டி ஆளுநர் மாளிகையில் ‘நவராத்திரி கொலு 2025’ செப்டம்பர் 22, முதல் அக்டோபர் 1 வரை கொண்டாடப்பட உள்ளது. ஆளுநர் ஆர்.என்.ரவி 22-ஆம் தேதி விழாவை தொடங்கி வைக்கவுள்ளார். தினமும் மாலை 4:00-5:00 மணி வழிபாடு, 5:00-6:00 மணி கலாச்சார நிகழ்ச்சிகளில் அதிகபட்சம் 200 பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும். இதில் பங்கேற்க https://tnrajbhavantour.tn.gov.in/navaratri/ மூலம் 20.09.2025க்குள் முன்பதிவு செய்யலாம்.

Similar News

News September 10, 2025

சென்னையில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்

image

சென்னை மாநகராட்சியின் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்கள் இன்று (செப்.10) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறவுள்ளது. திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, திரு.வி.க. நகர், அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர் மண்டலங்களில் உள்ள மொத்தம் 11 வார்டுகளில் இம்முகாம்கள் நடத்தப்படுகின்றன. பொதுமக்கள் தங்கள் முகாம்களில்பங்கேற்று பயன்பெறலாம்.

News September 9, 2025

சென்னையில் இரவு ரோந்து பணி விவரம்

image

சென்னையில் இன்று (09.09.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இதை SHARE செய்யவும்.

News September 9, 2025

சென்னையில் இடியுடன் மழை வெளுக்கும்

image

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் அடுத்த 48 மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியசும் இருக்க கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மழை வருமா? கமெண்ட்ல சொல்லுங்க.

error: Content is protected !!