News March 30, 2025

ஆளுநரை வரவேற்ற மாவட்ட ஆட்சியர்

image

தஞ்சாவூர் மாவட்டத்துக்கு இன்று (30.03.2025) வருகை தந்த ஆளுநர் ஆர்.என்.ரவியை, மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் கும்பகோணம் காவேரி திட்ட இல்லத்தில் புத்தகம் வழங்கி வரவேற்றார். இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜாராம் உடன் இருந்தார்.

Similar News

News April 2, 2025

தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும்ரூ.538 கோடி கூட்டுறவு கடன் 

image

2024-25ம் ஆண்டுக்கு 585 கோடி நிர்ணயிக்கப்பட்ட குறியீட்டில் தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் கடந்த ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் மார்ச் மாதம் 24 வரை ரூ.538.10 கோடி வழங்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் நடப்பு சாகுபடி பருவத்திற்கு 4312 19 டன் உரங்கள் தற்பொழுது இருப்பில் உள்ளதாக கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

News April 2, 2025

தஞ்சையில் சோழர்கள் ஆட்சி புரிந்த இடத்தில் ஒருநாள் சுற்றலா

image

சுற்றுலா வளர்ச்சி துறை, தஞ்சாவூர் மாவட்டம் இணைந்து ஒரு நாள் இன்பச் சுற்றுலா வரும் 6ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் சோழர்கள் ஆட்சி புரிந்த திருபழனம், திருவைகாவூர், திருபுறம்பியம், சோழன் மாளிகை, பட்டீஸ்வரம், உடையாளூர், தாராசுரம் ஆகிய இடங்களுக்கு அழைத்து செல்லப்படுகிறது. விருப்பம் உள்ளவர்கள் 9489129765 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை பகிரவும்

News April 2, 2025

தஞ்சாவூர் டிகிரி முடித்தவர்களுக்கு வேலை

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் உதவி மேலாளர் (Assistant Manager) பணிக்கான 100 இடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ரூ.15,000 ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதுகலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் <>இங்கே க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்கள்.

error: Content is protected !!