News January 6, 2025
ஆளுநரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

நாளை 07-01-2025 காலை 10.00 மணியளவில் திமுக தலைமை கழகப் அறிவிப்பிற்கு இணங்க தமிழ்நாட்டின் தமிழ் தாய் வாழ்த்தையும் தொடர்ந்து அவமானப்படுத்தும் ஆளுநரைக் கண்டித்து நாமக்கல் மோகனூர் சாலையில் அமைந்துள்ள BSNL தொலைபேசி நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது .இதில் மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய கழக நிர்வாகிகள், கிளைச் செயலாளர்கள் கொல்லிமலை ஒன்றிய கழகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கின்றனர்.
Similar News
News November 11, 2025
எம்.பி ராஜேஷ்குமார் நாளை பங்கேற்கும் நிகழ்ச்சி குறித்த விபரம்

நாமக்கல் மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என் ராஜேஷ்குமார் நாளை (12-11-2025) பங்கேற்கும் நிகழ்ச்சி நிரல் குறித்த விவரங்கள்; காலை 8:30 மணி முதல் காலை 11 மணி வரை வெண்ணந்தூர் பகுதிகளில் தார் சாலை அமைத்தல், அலுவலக கட்டிட திறப்பு விழா, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்தல், புதிய நிழற்கூடம் அமைத்தல், பட்டா வழங்கும் நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.
News November 11, 2025
உரம் கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை!

நாமக்கல் மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு உரம் விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார். விற்பனை முனைய கருவி மூலம் உரங்களை விற்பனை செய்ய வேண்டும், உர உரிமம் புதுப்பிக்காமலோ எம்ஆர்பி-யை விட அதிக விலைக்கு உரங்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், எனவும் விவசாயம் அல்லாத பயன்பாட்டிற்கு உரங்கள் பயன்படுத்தினாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
News November 11, 2025
நாமக்கல்: 8 கிராம் தங்கம், ரூ.50,000 பணத்துடன் திருமணம்

TN அரசு சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிக்க டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண திட்டத்தை செயல்படுத்துகிறது. இதன்படி, மணமக்கள் 10th முடித்திருந்தால் ரூ.25,000, 8 கி தங்கம், டிகிரி பெற்றிருந்தால் ரூ.50,000, 8 கி தங்கம் வழங்கப்படுகிறது. இதற்கு, BC,MBC/SC,ST & FC/BC,MBC முறையில் திருமணம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு சமூக நல அலுவலரை அணுகலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.


