News July 26, 2024
ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற திமுக நிர்வாகிகள்

மக்களவை தேர்தல் முடிவுகள் பற்றி சென்னையில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி தலைமையிலான ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமுரளி தலைமையில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல் தொழில்நுட்ப பிரிவை மேலும் வலுப்படுத்த தேவையான கருத்துகளை எடப்பாடி வழங்கினார்.
Similar News
News March 3, 2026
தென்காசியில் போட்டியிட நகரமன்ற தலைவர் விருப்ப மனு

திமுக சார்பில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளிப்பதற்கு வரும் மார்ச் 6 ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதனால் திமுக சார்பில் விருப்ப மனு அளிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தென்காசி சட்டமன்ற தொகுதியில், திமுக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர், திமுக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு அளித்தார்.
News March 3, 2026
தென்காசி: சாலை விபத்தில் ஒருவர் பரிதாப பலி.!

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அடுத்த ஓடைமறிச்சான் காமராஜ்நகர் பகுதியைச் சேர்ந்தவர் வேதராஜ் (52). இவர் திருச்செந்தூர் அருகே நடந்த சாலை விபத்தில் படுகாயமடைந்தார். இந்நிலையில் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று (மார்ச்.2) சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து திருச்செந்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News March 3, 2026
தென்காசி: தேர்தலை புறக்கணிக்கும் கிராம மக்கள்.!

கடையநல்லூர் அருகே உள்ள பால அருணாசலபுரம் கிராமத்தில், சுடுகாடு செல்லும் சாலை பிரச்சனை நடந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட இறந்த மூதாட்டியின் உடலுடன் போராட்டம் நடத்தி இருந்தனர். இந்த நிலையில் தற்போது வீடுகளில் கருப்பு கொடி ஏந்தி தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு பலகை வைத்துள்ளர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


