News March 27, 2024

ஆலத்தூர்: விவசாயி தூக்கிட்டு தற்கொலை

image

ஆலத்தூர் தாலுகா, நாரணமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி(60). விவசாயியான இவர் குடும்ப பிரச்னை காரணமாக, தனது விவசாய நிலத்தில் உள்ள மாட்டு கொட்டகையில் தூக்குப்போட்டு கொண்டார். இதை பார்த்த அவரது மகன், ராமசாமியை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். இது குறித்து பாடாலூர் போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News September 19, 2025

பெரம்பலூர் வருகை தரும் அமைச்சர்

image

பெரம்பலூர் மாவட்டம் மங்கலம், தொண்டைபாடி, நொச்சிகுளம், அருணகிரி மங்கலம், திம்முர், கூடலூர், கொட்டரை, சாத்தனூர், கொளக்காநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு பணிகளை துவக்கி வைத்து அடிக்கல் நாட்டி வைப்பதற்காக போக்குவரத்து துறை மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் இன்று (19-09-2025) பெரம்பலூர் மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார்.

News September 19, 2025

பெரம்பலூர்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

பெரம்பலூர் மக்களே.., வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News September 19, 2025

பெரம்பலூர் மக்களே இன்று நீங்கள் ரெடியா?

image

பெரம்பலூர் மக்களே உங்கள் ஊருக்கே வந்து உங்கள் பட்டா, ஆதார், ரேஷன் , பாண் கார்ட் போன்ற அனைத்துவகையான கோரிக்கைகளை நிறைவேற்றும் சூப்பர் திட்டம் தான் உங்களுடன் ஸ்டாலின் திட்டம், நமது பெரம்பலூரில் இன்று 19.09.2025 ஆம் தேதி முகாம் நடைபெறும் இடங்கள் இதுதான்!
1.பெரம்பலூர்
அரசு உயர்நிலைப்பள்ளி, வேலூர்,
2.வேப்பூர்
ஆர்சி செயின்ட் ஜான் உயர்நிலைப்பள்ளி, பெருமத்தூர்,
மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!