News December 23, 2025
ஆலங்குளம்: வாகனம் மோதி சிறுவர் பலி!

ஆலங்குளம் பகுதியை சேர்ந்த சிறுவன் இளவேந்தன் (17). தொழிலாளியான இவர் நேற்று முன் தினம் இரவு டூவீலரில் நன்பர்களை சந்திக்க சென்றவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் நேற்று காடுவெட்டி கிராமம் அருகே கால்வாயில் இறந்த நிலையில் கிடந்தார். தகவலறிந்து வந்த ஊத்துமலை போலீசார் உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இளவேந்தன் உயிரிழந்தது தெரியவந்தது.
Similar News
News December 25, 2025
தென்காசி: வனவிலங்கு வேட்டைக்கு முயற்சி; இருவர் கைது

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே மருக்காலன்குளம் மற்றும் மேசியாபுரம் பகுதிகளைச் சேர்ந்த காசிப்பாண்டியன் மற்றும் முருகராஜ் ஆகியோர், வன விலங்குகளை வேட்டையாடும் நோக்கில் தங்கள் தோட்டத்தில் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ஆலங்குளம் வனத் துறையினர் நடத்திய சோதனையில் சட்டவிரோத மின்வேலி கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, இருவரையும் கைது செய்யப்பட்டனர்.
News December 25, 2025
தென்காசி: நீண்ட கால துன்பம் நீக்கும் ஆலயம்

தென்காசி, கீழப்பாவூர் நரசிம்மர் கோவில் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இங்கு 16 திருக்கரங்களுடன் நரசிம்மர் காட்சி தருகிறார். இங்குள்ள நரசிம்ம தீர்த்தத்தில் நீராடினால் சகல பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம். நரசிம்மருக்கு பிரியமான பானகம் படைத்து வணங்கினால் அவரின் முழு அருளும் கிடைக்கும். நரசிம்மரை தியானம் செய்பவர்கள் தம் பகைவர்களை சுலபமாக வெல்லும் திறன் பெறுவர். நீண்ட கால துன்பங்கள் நீங்கும். SHARE
News December 24, 2025
தென்காசி: மரத்தில் தூக்கிட்டு ஒருவர் தற்கொலை

தென்காசி மாவட்டம், புளியங்குடி, சிந்தாமணி அம்பேத்கர் தெருவை சேர்ந்த முனீஸ்வரன் மகன் செல்லப்பா (45) என்பவர், இன்று புளியங்குடி – ராஜபாளையம் மெயின் ரோட்டில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த தகவலறிந்த புளியங்குடி காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்தவர் உடலை உடற்கூறு ஆய்வுக்காக புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


