News November 26, 2024
ஆலங்குளம்: கனிம வள லாரிகள் மீது கல்வீசிய 2 பேர் கைது

ஆலங்குளம் பகுதியில் உள்ள கல்குவாரியில் இருந்து கேரளாவிற்கு கனிம வளங்கள் ஏற்றிக்கொண்டு ராம் நகர் வழியாக சென்ற 2 லாரிகள் மீது கல் வீசிய வழக்கில் 4 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர். இதில் கேரளாவிற்கு கனிம வளங்கள் கொண்டு செல்லக்கூடாது எனக்கூறி அழகாபுரி பாபநாசபுரத்தை சேர்ந்த சுகிர்த செல்வம், பிரவின் ஆகியோர் லாரியை தாக்கியது தெரிய வந்தது. நேற்று(நவ.,25) இருவரையும் கைது செய்தனர்.
Similar News
News October 2, 2025
தென்காசி: டிகிரி, டிப்ளமோ படித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!

தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறையில் அப்ரண்டீஸ் பயிற்சிக்கான 79 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிப்ளமோ, B.E படித்தவர்கள் இப்பணிக்கு அக். 16க்குள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் தெரிந்துகொள்ள இங்கு <
News October 2, 2025
தென்காசி: கடைகள் ஏலம் அறிவிப்பு

தென்காசி நகராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள தினசரி சந்தையில் உள்ள 77 கடைகளை குத்தகை உரிமம் அனுபவித்துக் கொள்ள ஆணையாளர் அல்லது அவரது அதிகாரம் பெற்றவரால் ஏலம் விடப்பட உள்ளது. அக்டோபர் 24, 29 ஆகிய தேதிகளில் நடைபெறும் ஏலத்தில் கலந்து கொள்ள விரும்புவோர் ஏலம் நடைபெறும் நாளில் காலை 11 மணி வரை ஒப்பந்தப்புள்ளிகள் பெற்றுக்கொள்ளப்படும் என்றும், 11.30 மணிக்கு ஏலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News October 2, 2025
தென்காசி: ரயில் சேவையில் மாற்றம்

அக்டோபர் மாதம் மாற்றுப்பாதையில் இராஜபாளையம் வழி செங்கோட்டை – மயிலாடுதுறை (16848/16847) விரைவுவண்டி இயக்கம். இரயில் தண்டவாள மேம்பாட்டுப் பணிகள் காரணமாக செங்கோட்டை – மயிலாடுதுறை விரைவுவண்டி (16848) வழி: இராஜபாளையம் வரும் 03,04, 05,06, 07,09, 10,11,12, 13, 14,16,17,18,22,23,24,25,26,27,28,30,31ஆகிய தேதிகளிலும் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே தகவல்.