News August 30, 2024

ஆற்றங்கரைகளை பலப்படுத்த ஆட்சியரிடம் கோரிக்கை மனு

image

உமரிக்காடு கிராம விவசாய சங்கத் தலைவர் கார்த்தீசன் தலைமையிலான விவசாயிகள், ஆட்சியர் இளம் பகவத்திடம் நேற்று மனு அளித்தனர். அதில், முக்காணியில் கடந்த டிசம்பர் மாதம் பெய்த மழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பல இடங்களில் கரைகள் உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. மழைக்காலம் வருவதற்குள் ஆற்றங்கரையினை உயரமாக அமைத்து பலப்படுத்தி, மக்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு குறிப்பிட்டனர்.

Similar News

News September 14, 2025

தூத்துக்குடி: இந்த வாய்ப்பை MISS பண்ணாதீங்க!

image

தூத்துக்குடி மக்களே; மத்திய அரசின் புலனாய்வு துறையில் புலனாய்வு அதிகாரிக்கான காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு B.sc முடித்திருந்தால் போதும். இதற்கு மாதம் ரூ. 25,500 – 81,100 வரை சம்பளம் வழங்கப்படும். 18-27 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் இங்கே <>கிளிக்<<>> செய்து (செப்.14) இன்றே விண்ணப்பிக்கவும். செம்ம வாய்ப்பு. B.sc முடித்த அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News September 14, 2025

தூத்துக்குடி: காவலரின் கணவரிடம் அரிவாளில் வெட்டி வழிப்பறி

image

தூத்துக்குடி, எட்டயபுரத்தை சேர்ந்த ஜேசுராஜ் (47) என்பவர் மனைவி தமிழ்ச்செல்வி விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக உள்ளார். இவரது கணவன் ஜேசுராஜ் நேற்று முன்தினம் இரவு எட்டயபுரத்தில் நடந்து வந்து கொண்டிருந்த போது 3 பேர் கொண்ட கும்பல் அவரை அரிவாளால் வெட்டி 2300 பணத்தை ஜிபே மூலம் பறித்து சென்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 14, 2025

தூத்துக்குடி: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000/- APPLY…!

image

டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முதல் இரண்டு குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு மூன்று தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. இங்கு <>க்ளிக்<<>> செய்து அப்பளை பண்ணா போதும். மேலும் தகவல்கள் மற்றும் புகார்களுக்கு 9489048910, 044-22280920 அழையுங்க… புதுமணதம்பதிகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு SHARE பண்ணுங்க…

error: Content is protected !!