News April 3, 2024
ஆற்காடு அருகே காரில் வந்தவரிடம் ரூ.1,27,000 பறிமுதல்

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த விளாபாக்கத்தில், தேர்தல் கண்காணிப்பு குழு அலுவலர் பாண்டியன் தலைமையில் இன்று(ஏப்.3) அதிகாலை அந்த வழியாக வந்த வாகனங்களை சோதனை செய்தனர். அப்போது சென்னை நோக்கி சென்ற காரில் சோதனையிட்டதில், பிரபாவதி என்பவர் ரூ.1 லட்சத்து 27 ஆயிரம் கொண்டு சென்றது தெரிய வந்தது. அதை பறிமுதல் செய்து ஆற்காடு வட்டாட்சியர் அருள் செல்வத்திடம் ஒப்படைத்தனர்.
Similar News
News February 14, 2026
ராணிப்பேட்டை: பெண் குழந்தைக்கு ரூ.50,000!

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News February 14, 2026
ராணிப்பேட்டையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

ராணிப்பேட்டை நகரில் வருகின்ற பிப்ரவரி 20 வெள்ளிக்கிழமை அன்று பழைய bsnl அலுவலக வளாகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. சுமார் 25க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் 300 பணி காலி இடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்காக முகாம் நடைபெறுகிறது. கல்வித் தகுதி எட்டாம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரை. மேலும் விவரங்களுக்கு 94 990 55 897 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
News February 14, 2026
ராணிப்பேட்டையில் பரபரப்பு!

ராணிப்பேட்டை வண்டி மேட்டுச்சாலையில் பிசியோதெரபி கிளினிக் நடத்துபவர் டாக்டர் சரவணன் (36). கடந்த 12ம் தேதி இங்கு ஒரு பெண் சிகிச்சைக்காக தனது 17வயது மகளுடன் வந்துள்ளார். அப்போது அந்த பெண்ணை சிகிச்சைக்கு அனுப்பிவிட்டு, டாக்டர் மகளிடம் அத்துமீற முயன்றுள்ளார். அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர், போலீசில் புகார் செய்தார். விசாரணை செய்து போலீசார் டாக்டரை போக்ஸோவில் கைது செய்தனர்.


