News August 31, 2024
ஆறு துணை மின் நிலையங்களில் இன்று மின்தடை

திருச்சி மாவட்டத்தில் கொளக்குடி, குணசீலம், பூவலூர், வேங்கைமங்கலம், அபிஷேகபுரம், காட்டுப் புத்தூர் ஆகிய துணைமின் நிலையங்களில் இன்று (31.8.2024) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் காலை 09:45 மணி முதல் மணி மாலை 04:00 வரை மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 14, 2025
Way2News எதிரொலி: மாந்துறையில் குடிநீர் குழாய் சீரமைப்பு

திருச்சி மாவட்டம், மாந்துறை சரஸ்வதி கல்லூரி அருகில் குடிநீர் குழாயில் கசிவு ஏற்பட்டு சாலை ஓரத்தில் தண்ணீர் தேங்கி நிற்பது குறித்து Way2News-இல் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இதனை அடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேற்று குழாய் கசிவை சரி செய்து, தண்ணீர் தேங்கி இருந்த இடத்தில் மணல் நிரப்பி சாலையை சீரமைத்துள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
News August 14, 2025
கிராமசபை கூட்டம்: ஆட்சியர் அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று கிராம சபை கூட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் சரவணன் இன்று அறிவித்துள்ளார். இதில் பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும் எனவும் காலை 11 மணிக்கு திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடைபெற உள்ள கிராம சபை கூட்டத்தில் மக்கள் கலந்து கொள்ள வேண்டும் எனவும் ஆட்சியர் அறிவித்துள்ளார்.
News August 14, 2025
திருச்சி: டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு

சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் ஆக.15-ம் தேதி, திருச்சி மாவட்டத்தில் இயங்கும் அனைத்து வகை மதுபான கடைகள் மற்றும் கூடங்கள் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் சரவணன் அறிவித்துள்ளார். அன்றைய தினத்தில் மதுபானம் விற்பனை செய்வதையோ, வேறு இடங்களுக்கு கொண்டு செல்வதையோ தவிர்க்க வேண்டும் என்றும், மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆட்சியர் எச்சரித்துள்ளார். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!