News August 17, 2024

ஆர்.எஸ்.மங்களம் அருகே 700 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்

image

இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே காரைக்குடி மெயின் ரோட்டில் குடிமைப் பொருள் தடுப்பு குற்ற பிரிவு எஸ்.ஐ.மோகன் தலைமையிலான போலீசார் நேற்று(ஆக.,16) வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக சுமோ காரில் ரேசன் அரிசி கடத்திய கொத்தடி சங்கர்(50), பெருவழுதி(30) ஆகியோரை கைது செய்த போலீசார் 700 கிலோ ரேசன் அரிசி மற்றும் டாடா சுமோ காரையும் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News September 9, 2025

இராமநாதபுரம்: மின்சாதனங்கள் பழுது நீக்கும் பயிற்சி

image

இராமநாதபுரம் செய்யது அம்மாள் மருத்துவமனை எதிரில் உள்ள சிகில்ராஜ தெரு, சாந்த்பீவி காம்ப்ளக்ஸ் 2-வது தளம் பகுதியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சுய ஊரக வேலைவாய்ப்பு மையம் இணைந்து நடத்தும், வீட்டு உபயோக மின்சாதனங்கள் பழுது நீக்குதல் பயிற்சி இலவசமாக நடத்தப்பட உள்ளது. பயற்சி ஆரம்பிக்கப்படும் நாள் (செப்.15) பயிற்சி நாட்கள்: 30. பயிற்சி நேரம்: 9.30 AM – 5.00 PM . முன்பதிவு அவசியம்: தொடர்புக்கு: 9087260074

News September 9, 2025

ராமநாதபுரத்தில் 2 தினங்களுக்கு மதுபான கடைகள் மூடல்

image

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அமைந்துள்ள தியாகி இமானுவேல் சேகரனாரின் குருபூஜை விழா 11ஆம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு நாளை மறுதினம் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து மதுபான கடைகளிலும் விற்பனை கிடையாது என ஆட்சியர் அறிவித்துள்ளார். கள்ளச் சந்தையில் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை.

News September 9, 2025

இராமநாதபுரத்தில் 2 நாட்கள் குடிநீர் நிறுத்தம்

image

இராமநாதபுரத்தில் கூட்டுக் குடிநீா் திட்டத்தின் (காவிரி), தலைமையிடமான முத்தரசநல்லூரில் மின்சார வாரியத்தால் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. காவிரி கூட்டுக் குடிநீா் திட்ட மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய், புதன்கிழமை என இரண்டு நாள்களுக்கு, குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும் என மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்தாா். *ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!