News August 22, 2024
ஆர்.எஸ்.மங்கலத்தில் வேளாண் இடுபொருள் வழங்கிய கலெக்டர்

ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் வட்டார வேளாண் விரிவாக்க அலுவலகத்தில் நேற்றும்(ஆக.,21), இன்றும் உங்களைத் தேடி உங்கள் ஊரில் சிறப்பு திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அப்போது, விவசாய பயனாளிகளுக்கு வேளாண் இடுபொருட்களை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார். தொடர்ந்து பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
Similar News
News September 8, 2025
ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல்துறை

இன்று (செப்டம்பர்.08) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.
News September 8, 2025
ராமநாதபுரத்தில் 144 தடை உத்தரவு அமல்

ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை காலை முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வருகிறது. இமானுவேல் சேகரன் நினைவு தின நிகழ்ச்சியை ஒட்டி ராமநாதபுரம் ஆட்சியர் 144 தடை உத்தரவை பிறப்பித்தார். நாளை காலை முதல் செப்.15ம் தேதி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முத்துராமலிங்க தேவர் குருபூஜையை முன்னிட்டு அக்.25 முதல் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படும்.
News September 8, 2025
ராமநாதபுரம்: டிகிரி முடித்தால் Bank-யில் வேலை உறுதி

ராமநாதபுரம் மாவட்ட இளைஞர்களே வங்கி பணியாளர் தேர்வாணையம் மூலம் தமிழ்நாடு கிராம வங்கியில் அலுவலக உதவியாளர் பணிக்கு 468 காலி பனியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வித் தகுதி ஏதாவது ஒரு டிகிரி படித்தால் போதும் 21 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். சம்பளம் ரூ.35,000 . விண்ணபிக்க கடைசி தேதி : 21-09-2025. மேலும் விவரங்களுக்கு <