News December 30, 2024
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் கைது

பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்தர் தலைமையில் செங்கல்பட்டு பழைய பேருந்து நிறுத்தம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி இல்லாததால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.
Similar News
News October 1, 2025
ஸ்தம்பித்த தாம்பரம் ரயில் நிலையம்

ஆயுதபூஜை பண்டிகை அக்.,1-ம் தேதியான இன்று கொண்டாடப்படுகிறது. தொடர்ந்து 2-ம் தேதி காந்திஜெயந்தி வருவதால் தாம்பரத்தில் இருந்து சொந்த ஊருக்கு பலரும் புறப்பட்டு சென்றனர். இந்த தொடர் விடுமுறையை அடுத்து பொதுமக்கள் பலரும் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர். இதனால் தாம்பரம் ரயில் நிலையம் (ம) பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் குவிந்தனர்.
News October 1, 2025
செங்கல்பட்டு: சாலை விபத்தில் கல்லூரி மாணவன் பலி

செங்கல்பட்டு அடுத்த பெரியநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் ஜோஷ்வா. இவர் பொறியியல் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் பைக்கில் அருகிலுள்ள பெட்ரோல் பங்கிற்கு பெட்ரோல் நிரப்ப சென்றார். அப்போது முன்னாள் சென்ற லாரியின் மீது மோதி படுகாயமடைந்தார். உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் நேற்று இரவு உயிரிழந்தார். இதையடுத்து பெற்றோரின் சம்மதத்துடன் ஜோஸ்வாவின் கண்கள் தானம் அளிக்கப்பட்டது.
News October 1, 2025
செங்கல்பட்டில் இன்று இரவு ரோடு செல்லும் காவலர் விவரம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று (செப்-30) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.