News October 9, 2024
ஆரம்ப சுகாதார நிலையங்களில் 300 படுக்கைகள் தயார்

வடகிழக்கு பருவமழையையொட்டி, சேலம் மாவட்டத்தில் நோய் தடுப்பு பணிகளுக்காக மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் 300 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் சேலம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பணிகள் முற்றிலும் தயாராக உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News July 11, 2025
சேலம் விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

சேலம் மாவட்ட விவசாயிகள் இ- வாடகை செயலி மூலம் வேளாண்மைப் பொறியியல் துறையின் வேளாண் இயந்திரங்களை குறைந்த வாடகைக்கு எடுத்து பயன்பெறலாம் என ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். விவசாயிகள் தங்கள் கைபேசியில் உழவர் செயலியை தரவிறக்கம் செய்து அதில் உள்ள இ-வாடகை செயலி மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது வேளாண்மைப் பொறியியல் துறையின் இணையதளமான: https://mtsaed.tn.gov.in/evaadagai எனும் தளத்தை அணுகலாம்.(SHARE)
News July 10, 2025
சேலம்: 8 ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இயக்கம்

சேலம் ரயில்வே கோட்ட பகுதிகளில் இயங்கும் கோவை – மன்னார்குடி செம்மொழி – கோவை தினசரி எக்ஸ்பிரஸ் (16616/16615), கோவை – திருப்பதி – கோவை எக்ஸ்பிரஸ் (22616/22615), கோவை – நாகர்கோவில் – கோவை எக்ஸ்பிரஸ் (22668/22667), கோவை – ராமேஸ்வரம் – கோவை வாராந்திர எக்ஸ்பிரஸ் (16618/16617) ஆகிய 8 ரயில்களில் தற்காலிகமாக கூடுதல் பெட்டிகள் இணைத்து இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
News July 10, 2025
சேலம் மாவட்டத்தில் முகாம் நடைபெறும் இடங்கள்

சேலத்தில் வருகின்ற ஜூலை 15ஆம் தேதி ’உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் தொடங்கப்பட உள்ளது. இந்நிலையில், எந்தெந்த இடங்களில் நடைபெறும் எனும் அறிவிப்பு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சூரமங்கலம், எருமாபாளையம், எடப்பாடி, அயோத்தியாபட்டினம், திருமலகிரி, வீரபாண்டி ஆகிய பகுதிகளில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.