News February 2, 2026

ஆரணி: 10.5% இட ஒதுக்கீடு கேட்டு தற்கொலை!

image

தி.,மலை மாவட்டம் ஆரணி அருகே புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் பட்டதாரி வன்னியர்களுக்கு 10.5% தனி இட ஒதுக்கீடு வழங்க கோரி கைப்பட கடிதம் எழுதி வைத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. மேலும், சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News February 21, 2026

FLASH தி.மலை: வேட்பாளர்களை அறிவித்தார் சீமான்!

image

சட்டமன்ற தேர்தல் 2026ல், நாம் தமிழர் கட்சியின் சார்பில் தி.மலையில் களமிறங்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளார் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். அதன்படி, தி.மலையில் சு.விக்னேஷ், செங்கம் – ஷோபா, கலசப்பாக்கம் – சீதா, போளூர் – உமாதேவி பிரகாஷ், ஆரணி – தவமணி ரமேஷ், செய்யாறு – மு. தமிழ்ச்செல்வன், வந்தவாசி – கணேஷ், கீழ்பென்னாத்தூர் – வி. லோகநாதன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

News February 21, 2026

தி.மலை: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

தி.மலை மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1. விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம் 2. அல்லது <>pmjay.gov.in <<>>இணையதளத்தில் ரேஷன் & ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். 3.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News February 21, 2026

தி.மலை: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

image

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, சோப்பு, பிஸ்கஸ்ட் போன்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) தி.மலை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க.

error: Content is protected !!