News May 13, 2024

ஆரணி: மாணவன் பலியான சோகம்

image

ஆரணி அடுத்த ஆதனூர் கிராமத்தில் வசிப்பவர் பிரவீன் குமார். இவர் தனியார் பள்ளியில் படித்து வருகிறார். இவர் நேற்று மாலை தனது நண்பர்களுடன் அருகில் உள்ள கிணற்றில் குளிக்க சென்றார். அப்போது தண்ணீரில் மூச்சு திணறல் ஏற்பட்டு துடித்தார். இதனைக் கண்ட நண்பர்கள் இவரை மீட்டு ஆரணி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பலியானார். ஆரணி தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

Similar News

News August 20, 2025

நாடாளுமன்றத்தில் தி.மலை எம்.பி அண்ணாதுரை கேள்வி

image

2023-24 மற்றும் 2024-25 நிதியாண்டில் தமிழ்நாட்டில் மாதிரி தொழில் மையங்களால் (MCCS) ஏற்பாடு செய்யப்பட்ட வேலைவாய்ப்பு முகாம்களின் எண்ணிக்கை விவரங்கள், இந்த நிகழ்வுகள் மூலம் வேலை வாய்ப்புகளைப் பெற்ற பயனாளர்களின் எண்ணிக்கை விவரங்கள், இந்த வேலைவாய்ப்பு முகாம்களில் விளிம்புநிலை மக்களை பங்கேற்க செய்ய ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? நாடாளுமன்றத்தில் தி.மலை எம்.பி அண்ணாதுரை கேள்வி எழுப்பினார்.

News August 19, 2025

தி.மலையில் இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்!

image

தி.மலை மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 19) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!

News August 19, 2025

தி.மலை: சொத்து வாங்கும் போது இதை CHECK பண்ணுங்க!

image

✅வில்லங்க சான்றிதழ் (சொத்தின் மீது கடன் (அ) அடமானம்)

✅தாய்பத்திரம் (சொத்தின் பழைய உரிமைகள்)

✅சொத்து யாருடைய பெயரில் உள்ளது மற்றும் விற்பனை பத்திரங்கள்

✅கட்டட அனுமதி (CMDA அ DTCP வரைபடம்)

✅வரி ரசீதுகள் (சொத்து, குடிநீர், மின்சார வரிகள்)

சொத்துக்கள் வாங்கும் போது வீணாக ஏமாறாமல் இந்த எண்களுக்கு 9498452120 அழைத்து CHECK செய்து வாங்குங்க… SHARE பண்ணுங்க..

error: Content is protected !!