News October 22, 2025
ஆரணி: கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது

தி.மலை மாவட்டம் ஆரணி வட்டம் நெசல் (மதுரா) புதுப்பட்டு கிராமம் மாரியம்மன் கோயில் தெரு அருகே பிச்சை என்பவர் வசித்து வருகிறார். மலையின் காரணமாக ஓட்டு வீட்டின் சுவர்கள் தெற்கு புறம் மற்றும் வடக்கு புறம் முழுவதுமாக இன்று 22.10.2025 காலை இடிந்துள்ளது. நல்வேலையாக யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை, மேலும் திருவண்ணாமலை பகுதிகளை காலை தொடங்கி மழை பெய்தக் கொண்டே இருக்கிறது.
Similar News
News October 22, 2025
தி.மலை இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (22.10.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News October 22, 2025
தி.மலை: 12th போதும் ரயில்வே வேலை ரெடி..

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தில் மொத்தமாக 8,850 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிகளுக்கு 12th பாஸ் அல்லது டிகிரி முடித்து இருக்க வேண்டும். சம்பளம்: ரூ.19,900 முதல் ரூ.35,400 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.11.2025 ஆன்லைனில் விண்ணப்பிக்க:<
News October 22, 2025
தி.மலை மாவட்டத்திற்கு ஆரஞ்சு ALERT!

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தி.மழை மாவட்டத்திற்கு கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. பொதுமக்கள் அனைவரும் தேவையின்றி வெளியே செல்லாமல் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த தகவலை பகிரவும்.