News February 12, 2026

ஆரணி அருகே அலறியடித்து ஓடிய மக்கள்!

image

தி.மலை: ஆரணி அடுத்த ராட்டினமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள சாலையோரம் உள்ள புளியமரத்தின் கீழ் குப்பைகளை கொட்டி, எரித்து வந்தனர். இந்நிலையில், நேற்று(பிப்.11) மரத்தடியில் வைக்கப்பட்ட தீ, காற்றின் வேகத்தில் மரத்தைப் பற்றியது. இதையடுத்து மரம் கொளுந்து விட்டு எரிந்து விழுந்தது. இதைக் கண்ட அருகே இருந்த மக்கள் அலறி அடித்து ஓடினர். தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர்.

Similar News

News February 17, 2026

தி.மலையில் பரிதாப பலி!

image

வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன்(45). இவரது மகன் கனிஷ்(18), சென்னையில் படித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன் தினம் அவரை சென்னைக்கு பஸ் ஏற்ற பைக்கில் பஸ் நிலையம் நோக்கி சென்றார். பைக்கை கனிஷ் ஓட்டினார். அப்போது, திண்டிவனம் சாலையில் பின்னார் வந்த அரசு பஸ் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு, படுகாயமடைந்தனர். தொடர்ந்து, கனிஷ் மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

News February 17, 2026

தி.மலையில் விஷம் குடித்து தற்கொலை!

image

ஆடையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரமணி. இவரது மனைவி தமிழ்செல்வி(40). இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளார். இந்நிலையில், தமிழ்செல்வி கடந்த சில ஆண்டுகளாக உடல் நல பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். கடந்த பிப்.14ஆம் தேதி விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தவரை மருத்துவமனையில் உறவினர்கள் அனுமதித்தனர். அங்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி நேற்று முன் தினம் பரிதாபமாக உயிரிழந்தார்.

News February 17, 2026

தி.மலை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (பிப்.16) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!