News February 20, 2026
ஆரணி அருகே அதிரடி கைது!

தி.மலை: ஆரணி அருகே பையூர் ஆற்றுப்பாலம் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக ஆரணி தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், நடந்த சோதனையில் பையூர் கிராமத்தைச் சேர்ந்த விக்னேஸ்வரன்(35), ராகுல்(30) ஆகியோரிடம் கஞ்சா இருந்ததைக் கண்ட போலீசார், அவர்களௌ கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News February 20, 2026
தி.மலை: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி EASY!

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே <
News February 20, 2026
தி.மலை: கோயில் எதிரே தூக்கில் தொங்கிய நபர்!

வெம்பாக்கம் தாலுகா தூசி அருகே கீழ்நெல்லி கிராமம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (48), கூலி தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமண ஆகவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் அதே பகுதியில் கோவில் எதிரில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு கொண்டார். அந்த வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து, உடனடியாக அவரை மீட்டு காஞ்சீபுரம் அரசு மருத்து வமனைக்கு கொண்டு சென்றனர்.
News February 20, 2026
CM-க்கு தபால் மூலம் கோரிக்கை வைத்த மாணவர்கள்

திருவண்ணாமலையில் அமைந்துள்ள கலைஞர் கருணாநிதி அரசு கலை மற்றும் அறிவியல் கலைக் கல்லூரியின் மாணவர்கள் சார்பில், முதுகலை படிக்கும் மாணவர்களுக்கும் இலவச லேப்டாப் வழங்கிட கோரி, நேற்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதனைத் தொடர்ந்து, இன்று (பிப்.19) தங்கள் கோரிக்கையான இலவச மடிக்கணினி வழங்க கோரி மனு எழுதி மாணவர்கள், தமிழக முதலமைச்சருக்கு தபால் மூலம் அனுப்பினர்.


