News August 6, 2024
ஆம்ஸ்ட்ராங் விவகாரத்தி பள்ளி தாளாளரை தேடும் போலீஸ்

ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு கேளம்பாக்கத்தை அடுத்த படூரை சேர்ந்த சதீஷ் என்பவரின் பெயரில் கொலை மிரட்டல் கடிதம் வந்திருந்தது. இதுகுறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டதில், முன்விரோதம் காரணமாக போலியான பெயரில் கொலை மிரட்டல் கடிதம் அனுப்பியது தெரியவந்தது. சதிஷ் என்பவரின் பெயரை பயன்படுத்தி கொலை மிரட்டல் கடிதம் எழுதிய கடலூர் பள்ளி தாளாளர் அருண்ராஜை கேளம்பாக்கம் போலீசார் தற்போது தேடி வருகின்றனர்.
Similar News
News September 19, 2025
சென்னை அருகே பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை

சூளைமேட்டை சேர்ந்த சங்கீதா என்பவருக்கு ஹாரிஸ் என்பவருடன் 02.02.25 திருமணமானது. பெற்றோர் 100 சவரன் தங்க நகை கொடுத்தும், ஹாரிஸ் மற்றும் தாயார் 200 சவரன், 2 கிலோ வெள்ளி, நிலம் கேட்டு கொடுமைப்படுத்தி அப்பெண்ணை வீட்டைவிட்டு வெளியேற்றி, பின் அவர் வீட்டிலும் சென்று சங்கீதாவை தாக்கியதாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் வரதட்சணை தடுப்பு குழு விசாரணையில் ஹாரிஸ் கைது செய்யப்பட்டு நேற்று சிறையில் அடைத்தனர்.
News September 19, 2025
பனைமரங்களை வெட்ட ஆட்சியர் அனுமதி கட்டாயம்

தமிழக அரசு பனை மரங்களை வெட்டுவதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. தவிர்க்க முடியாத சூழலில் பனை மரத்தை வெட்ட நேரிட்டால், மாவட்ட அளவிலான குழுவின் அனுமதி அவசியம். இந்தக் குழு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கூடி விவாதிக்கும். ஒரு மரத்தை வெட்டினால், அதற்கு ஈடாக 10 மரக்கன்றுகள் நடப்பட வேண்டும். மாவட்ட குழுவின் முடிவே இறுதியானது. அனுமதி பெற்ற பின்னரே மரத்தை வெட்ட வேண்டும்.
News September 19, 2025
சென்னை: 12th போதும் ரூ.81,000 சம்பளம்

எல்லைப் பாதுகாப்புப் படையில் ரேடியோ ஆபரேட்டர் (RO) & ரேடியோ மெக்கானிக் (RM) பிரிவில் கான்ஸ்டபிள் பணிக்கு 1,121 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ITI, 12th படித்தவர்கள் படித்திருந்தால் போதும். இந்த பணிக்கு மாத சம்பளமாக ரூ.25,500 முதல் ரூ.81,100 வரை வழங்கப்படும். செப்.23 வரை இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் இந்த <