News November 20, 2025
ஆம்ஸ்ட்ராங் வழக்கு; CBI-க்கு இடைக்கால தடை

ஆம்ஸ்ட்ராங் வழக்கு CBI-க்கு மாற்றப்பட்டதை எதிர்த்து TN அரசு SC-ல் மேல்முறையீடு செய்திருந்தது. இதில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், வழக்கை சிபிஐக்கு மாற்றியது சரியானது அல்ல அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இதனையடுத்து, அனைத்து வழக்குகளையும் CBI-க்கு ஏன் மாற்ற வேண்டும் என கோர்ட் கேள்வி எழுப்பியது. மேலும், எதிர்மனுதாரர் பதிலளிக்க உத்தரவிட்டு CBI விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
Similar News
News November 21, 2025
உணவு செரிமானமாக எடுத்துக் கொள்ளும் நேரம் தெரியுமா?

உணவு வயிற்றுக்கு சென்றால் போதும், அதுவாக செரித்துவிடும் என்று நினைப்போம். ஆனால், ஒவ்வொரு உணவு வகையும் நம் உடலில் ‘பயணம்’ செய்ய ஒரு நேரத்தை எடுத்துக்கொள்கிறது. நமது உடலில் ஜீரண மண்டலமும் அப்படித்தான் இயங்கி வருகிறது. அதனால் தான் சரியான முறையில் உணவு உண்ண வேண்டும் என்கின்றனர் டாக்டர்கள். எந்த உணவுகள் எவ்வளவு நேரத்தில் ஜீரணமாகின்றன என்பதை தெரிந்து கொள்ள மேலே உள்ள போட்டோக்களை SWIPE பண்ணி பாருங்க.
News November 21, 2025
நாளை உருவாகிறது புயல் சின்னம்.. கனமழை வெளுக்கும்

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது. இது, 26-ம் தேதி புயலாக மாற வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று முதல் 25-ம் தேதி வரை டெல்டா, தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யக்கூடும் என IMD தெரிவித்துள்ளது. குறிப்பாக, நெல்லை, குமரி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று(நவ.21) கனமழைக்கு வாய்ப்புள்ளது. உங்கள் ஊரில் மழையா?
News November 21, 2025
FLASH: பாகிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்

இன்று அதிகாலை பாகிஸ்தானில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் மையம் பூமிக்கு அடியில் 135 கி.மீ., ஆழத்தில் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மற்றும் யூரேசிய புவித்தட்டுகள் சந்திக்கும் உலகின் மிகவும் நில அதிர்வுள்ள மண்டலங்களில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் இந்தியாவில் சில பகுதிகள் அமைந்துள்ளன. இதனால் இப்பகுதிகளில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.


