News August 6, 2025
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; 17 பேரின் குண்டர் சட்டம் ரத்து

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 27 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் நாகேந்திரன் உட்பட 17 பேர் குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி, அவர்கள் தரப்பில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் கைதான 27 பேரில் 17 பேர் மீது குண்டர் சட்டத்தை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Similar News
News August 7, 2025
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெறும் இடங்கள்

சென்னையில் இன்று (ஆக.7) சோழிங்கநல்லூர், தண்டையார்பேட்டை, அடையார், ராயபுரம், தேனாம்பேட்டை ஆகிய பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. முகாம் நடைபெறும் இடங்களின் முழுமையான விபரங்களை<
News August 6, 2025
போராட்ட களத்தில் சின்மயி

சென்னை மாநகராட்சி துப்புரவு பணிகளை தனியாருக்கு மாற்றுவதை கண்டித்தும், நிரந்தர வேலை கோரியும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ரிப்பன் மாளிகையின் வெளியே கடந்த ஆக.1-ம் தேதியிலிருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு பின்னணி பாடகி சின்மயி இன்று நேரில் வந்து அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார். மேலும், போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் கூறினார்.
News August 6, 2025
சென்னை கலெக்டர் முக்கிய அறிவிப்பு

சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே செய்திகுறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை மாவட்ட வேலை வாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டுமையம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இதில் 10th தோல்வி, தேர்ச்சி, 12th, பட்டயப்படிப்பு முடித்து பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருப்பவர்கள் கிண்டியில் உள்ள வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை அனுகலாம் என்றார். (SHARE )