News July 28, 2024
ஆம்ஸ்ட்ராங் கொலையில் மேலும் 3 பேர் கைது

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முகிலன், அப்பு, நூர் விஜய் ஆகிய 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். ஏற்கெனவே, 18 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 21 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதால், மேலும் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது.
Similar News
News March 6, 2026
செங்கல்பட்டு: இந்த கார்டு இருந்தால் ரூ.5 லட்சம்!

செங்கல்பட்டு மக்களே திடீரென மருத்துவ செலவு வந்தால் கையில் பணம் இல்லை என்ற கவலை இனி வேண்டாம். மத்திய அரசின் சுகாதார காப்பீட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் Ayushman Card இருந்தால் அரசு மற்றும் சில தனியார் மருத்துவமனையில் இலவசமாக தரமான மருத்துவத்தை பெறலாம். அதன்மூலம் ஒரு குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வரை வழங்கப்படும். Ayushman Cardஐ பெற இப்போதே <
News March 6, 2026
கொந்தளிக்கும் செங்கல்பட்டு மக்கள்!

செங்கல்பட்டு மாவட்டத்தில் 2016-2022 காலகட்டத்தில் PMAY மூலம் 2,654 வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், வெறும் 44 வீடுகள் மட்டுமே பூர்த்தியடைந்துள்ளன. மீதமுள்ள 2,610 வீடுகள் இன்னும் கட்டுமான நிலையில் உள்ளன. மணல், செங்கல், சிமெண்ட் விலை உயர்வு, மானியம் போதாத நிலை மற்றும் கடன் வசதி சிக்கல்கள் ஆகியவை தாமதத்திற்கு முக்கிய காரணங்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் மக்கள் கொந்தளித்துள்ளனர்.
News March 6, 2026
தாம்பரம் ஜங்ஷனில் யாருக்கு பச்சை சிக்னல்?

தாம்பரம் சட்டமன்ற தொகுதியில் 3 முறை திமுக 1 முறை அதிமுக வென்றுள்ளது. தற்போது திமுகவின் எஸ். ஆர். ராஜா எம்.எல்.ஏவாக உள்ளார். தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இரு கட்சிகளுமே இங்கு வலுவாக உள்ளன. 2026 தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (TVK) மற்றும் நாம் தமிழர் கட்சி (NTK) ஆகியவை நகர்ப்புற வாக்குகளைப் பிரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்க வாய்ப்புள்ளது. இந்த முறை தாம்பரம் யாருக்கு? கமெண்ட்ல சொல்லுங்க.


