News August 9, 2024

ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு மிரட்டல்: ஒருவர் கைது

image

ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக போலீசார் ஒருவரை கைது செய்த்துள்ளனர். ஆம்ஸ்ட்ராங் மனைவி மற்றும் குழந்தையை கொலை செய்து விடுவதாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது வீட்டிற்கு கடிதம் ஒன்று வந்தது. இதையடுத்து, அவரது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மிரட்டல் தொடர்பாக கடலூரைச் சேர்ந்த பள்ளித் தாளாளர் அருண்ராஜை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.

Similar News

News November 9, 2025

ஆவடியில் துணை முதலமைச்சர் வருகை.

image

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சியில் வருகின்ற (24.11.2025) திங்கட்கிழமை அன்று பல்வேறு அரசு நிகழ்ச்சிகள் மற்றும் பொதுமக்கள் நலத்திட்ட உதவிகள் வழங்க மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வருகை தர உள்ளார் என்று அரசு தரப்பில் இருந்து அறிவிப்பு வந்துள்ளது. இதையடுத்து அதற்கான அரசு பணிகள் நடந்து வருகிறது.

News November 8, 2025

திருவள்ளூரில் இன்று ரோந்து காவலர்களின் விபரம்

image

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (8.11.2025) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதிசெய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை, மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.

News November 8, 2025

திருவள்ளூர்: பெண்களே நிலம் வாங்கினால் ரூ.5 லட்சம் மானியம்!

image

பெண்களை நில உடைமையாளர்களாக மாற்றும் வகையில் தாட்கோ மூலமாக நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண்கள் விவசாய நிலம் வாங்குவதற்கு ரூ.5 லட்சம் வரை மானியம் பெறலாம். அதேபோல், முத்திரைத்தாள், பதிவு கட்டணத்தில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்படும். இதில் பயனடைய விரும்பும் பெண்கள் <>இங்கு க்ளிக்<<>> செய்து மேலும் விவரங்களை தெரிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!