News November 23, 2024
ஆம்பூர் அருகே ஆம்புலன்சில் பிறந்த குழந்தை

ஆம்பூர் அடுத்த நாயக்கனேரி மலைப்பகுதியில் வசிக்கும் ஜெயக்குமார் என்பவரின் மனைவி தனலட்சுமி (19) என்பவருக்கு நேற்று (22.11.2024) திடீரென பிரசவ வலி ஏற்பட்ட நிலையில் 108 ஆம்புலன்ஸ் தகவல் கொடுத்துள்ளனர். உடனடியாக விரைந்து சென்ற 108 ஆம்புலன்ஸ் தனலட்சுமி அழைத்துக்கொண்டு வரும் வழியில் மலைப்பகுதியிலேயே ஆம்புலன்சில் தனலட்சுமிக்கு சுகப்பிரசவம் ஆகியுள்ளது. தாயும் சேயும் நலமாக உள்ளனர்.
Similar News
News August 7, 2025
இரவு ரோந்து பணியில் உள்ள காவலர்கள்

இன்று இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் விவரங்கள். திருப்பத்தூர் மாவட்ட காவல்
கண்காணிப்பாளர் ஆணைக்கிணங்க இன்று இரவு ரோந்து பணியில் உள்ள காவலர்களின் விவரங்கள் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை இருந்தாலும், புகார் இருந்தாலும் கொடுக்கப்பட்ட தொலைபேசி எண்ணை உடனே அழைக்கலாம்.
News August 6, 2025
திருப்பத்தூரில் வள்ளுவர் சிலை திறப்பு

திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாலை 4 மணியளவில் ஆட்சியர் அலுவலக தரை தளத்தில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா இந்திய செஞ்சிலுவை சங்கம் சார்பில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் செல்வம் மாலை அணிவித்து திறந்து வைத்தார். உடன் செஞ்சிலுவை சங்க திருப்பத்தூர் மாவட்ட தலைவர் கிஷோர் பிரசாத் மற்றும் பலர் உள்ளனர்.
News August 6, 2025
திருப்பத்தூர்: தாசில்தார் மீது எப்படி புகார் அளிக்கலாம்?

திருப்பத்தூர் மக்களே சாதி, குடிமை, குடியிருப்பு மற்றும் மதிப்பீடு சான்றிதழ் வாங்குவதற்கு, பட்டா மாற்றம், சிட்டா, உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்காக நாம் வாழ்க்கையாகல் கண்டிப்பாக ஒருமுறையாவது தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று இருப்போம்.அங்கு இவற்றை முறையாக செய்யாமல் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்புத் துறையில் (04179-299100) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்கள்.