News August 28, 2025
ஆம்பூருக்கு விரைந்த வேலூர் போலீசார்

ஆம்பூர் பகுதியில் கடந்த 2015-ம் ஆண்டு பெரும் கலவரம் ஏற்பட்டது. இதுதொடர்பான வழக்கு திருப்பத்தூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கின் தீர்ப்பு இன்று (ஆக.28) வழங்கப்பட உள்ளது. இதையொட்டி பாதுகாப்பு பணிக்காக எஸ்.பி மயில்வாகனன் உத்தரவின் பேரில் வேலூரில் இருந்து 2 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 100 போலீசார் ஆம்பூருக்கு சென்றனர்.
Similar News
News August 28, 2025
வேலூர்: B.E, B.Tech படித்தவர்களுக்கு வேலை

▶️ வேலூர் மக்களே, மின்சாரத்துறையில் காலியாக உள்ள 1,543 இன்ஜினியர் (ம) சூப்பர்வைசர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ▶️ சம்பளமாக மாதம் Rs.30,000– 1,20,000 வழங்கப்படும். ▶️ இதற்கு B.Sc, B.E.,B.Tech, M.Tech, ME படித்தோர் விண்ணபிக்கலாம். ▶️ விண்ணப்பிக்க https://www.powergrid.in/ என்ற இணையதளத்தில் 17.09.2025-க்குள் விண்ணபிக்க வேண்டும். (இன்ஜினியர் படித்தவர்களுக்கு SHARE பண்ணுங்க)
News August 28, 2025
வேலூர் மக்களே.. மிஸ் பண்ணிடாதீங்க

வேலூர் மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்” நாளை (ஆக.29) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை முகாம் நடைபெறுகிறது. காங்கேயநல்லூர் திருமுருகாநந்த கிருபானந்த வாரியார் ஆலயம், இளவம்பாடி கிராம ஊராட்சி சேவை மையம் கட்டிடம், கீழ அரசம்பட்டு எம்ஜிஆர் மஹால், தொண்டான் துளசி எஸ்.ஆர்.எம் மஹால் ஆகிய பகுதிகளில் முகாம் நடைபெறுகிறது. இதில், பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். (ஷேர் பண்ணுங்க)
News August 28, 2025
பாலகன் விநாயகர் டப்பில் குளிப்பது போன்று சிலை

வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வித்தியாசமான முறையில் விதவிதமாக சிலைகளை வைத்து இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது. அந்த வகையில் வேலூர் கொசப்பேட்டை சுப்பிரமணிய சுவாமி கோவில் தெருவில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலை பாலகன் விநாயகர் டப்பில் குளிப்பது போன்று வடிவமைக்கப்பட்டிருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அங்கு வந்த மக்கள் பாலகன் விநாயகர் சிலையுடன் புகைப்படம் எடுத்து கொண்டனர்.