News April 11, 2025
ஆம்புலன்சில் பிறந்த ஆண் குழந்தை

மதுரை மேலூர் பகுதியை சேர்ந்தவர் அய்யனார் இவரது மனைவி அபிராமி 25. இவர் இரண்டாவது பிரசவத்திற்காக தாய் வீடான கொட்டக்குடிக்கு சென்றுள்ளார். அப்போது திடீரென அபிராமிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் 108 ஆம்புலன்ஸ் அழைத்து மருத்துவமனைக்குசென்ற போது, செல்லும் வழியிலே பிரசவ வலி அதிகமானதால் 108 ஆம்புலன்ஸ் மருத்துவ பணியாளர் அபிராமிக்கு பிரசவம் பார்த்துள்ளார்.பிரசவத்தில் ஆம்புலன்சிலே ஆண் குழந்தை பிறந்துள்ளது.
Similar News
News April 18, 2025
மதுரை மாவட்ட உதவி எண்கள் அறிவிப்பு

மதுரை மாவட்டத்தில் உள்ள பொதுமக்களின் உதவிக்காக தொலைப்பேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.
▶️மாவட்ட கட்டுப்பாட்டு அறை -1077
▶️மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – 0452 –2546100
▶️காவல் -100
▶️விபத்து -108
▶️தீ தடுப்பு – 101
▶️குழந்தைகள் பாதுகாப்பு -1098
▶️மின்தடை உதவி எண் – 1912
▶️பேரிடர் கால உதவிக்கு – 1077
உங்க நண்பர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்தவும். அபத்தில் உள்ளவர்களுக்கு இது பெரிய உதவியாக இருக்கும்
News April 18, 2025
மதுரை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

மதுரை மாவட்டத்தில் இன்று (17.04.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News April 17, 2025
மதுரை : கஞ்சா கடத்தியவருக்கு 12 ஆண்டு சிறை

திண்டுக்கல் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் காரில் சுமார் 150 கிலோ கஞ்சாவை கடந்த 2017 ஆம் ஆண்டு கடத்தி வந்ததாக மதுரை மாவட்ட போதை பொருள் தடுப்பு சிறப்பு பிரிவு போலீசார் சசிகுமார் என்பவரை கைது செய்தனர். இந்த வழக்கில் அவருக்கு 12 ஆண்டுகள் சிறையும் ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்து மதுரை மாவட்ட போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.