News August 15, 2024
ஆம்னி பஸ் கட்டணம் இரு மடங்கு அதிகரிப்பு; பயணிகள் அதிருப்தி

கன்னியாகுமரி, நாகர்கோவிலில் இருந்து சென்னை கிளம்பாக்கம் செல்ல வழக்கமாக ரூ.700 முதல் ரூ.1200 வரை ஆம்னி பஸ்களில் கட்டணம் வசூலிக்கப்படும். தற்போது தொடர் விடுமுறை காரணமாக வரும் 18ஆம் தேதி வரை ஆம்னி பஸ்களில் ரூ.2000 முதல் ரூ.4000 வரை ஆம்னி பஸ்களில் இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதால் பயணிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். அரசு இதை கட்டுப்படுத்த வேண்டும் என பயணிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News April 30, 2025
மாணவியிடம் நகை பறித்த பெண்கள்; 4 பேர் கைது

புதுக்கடை அருகே தும்பாலி, ஆத்திவிளை பகுதியைச் சேர்ந்த 14 வயது மாணவி தையல் பயிற்சிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேர் மாணவியைப் பிடித்து தாக்கி அவரிடம் இருந்த 2 பவுன் நகைகளை பறித்து சென்றனர். இது தொடர்பாக புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து சக்தி, சந்தோஷ், மஞ்சுளா, வளையாபதி ஆகிய 4 பேரை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News April 29, 2025
கன்னியாகுமரி: எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் 30.04.2025 அன்று பிற்பகல் 04.00 மணியளவில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெறவுள்ளது. இதில் எண்ணெய் நிறுவனங்களின் மேலாளர்கள், எரிவாயு முகவர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த கூட்டத்தில் மாவட்ட முகவரிப் பட்டியலில் உள்ள தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள், எரிவாயு நுகர்வோர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
News April 29, 2025
95 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் – ஆட்சியர்

தொழிலாளர் தினமான 01.05.2025 அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டத்தினை ஊராட்சிகளின் எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையில் காலை 11.00 மணி அளவில் நடத்திட அரசு உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 95 ஊராட்சிகளிலும் அன்று கிராம சபை கூட்டம் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் அழகு மீனா இன்று தெரிவித்தார்.