News December 28, 2025
ஆபரேஷன் சிந்தூர்: ஒப்புக்கொண்ட பாகிஸ்தான்

இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் ஏற்பட்ட சேதங்களை இதுவரை மறுத்து வந்த பாகிஸ்தான், முதல்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது. தாக்குதலில், பாக்.,-கின் நூர் கான் விமானப்படை தளம், முக்கிய ராணுவ நிலைகள் பலத்த சேதமடைந்ததாக அந்நாட்டின் துணை பிரதமர் இஷாக் தார் தெரிவித்துள்ளார். 80-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை கொண்டு இந்தியா நடத்திய தாக்குதலில், வீரர்கள் பலர் காயமடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
Similar News
News February 14, 2026
சிறப்பு மகளிர் உரிமை தொகை ₹5000.. வெடித்தது சர்ச்சை

ஊதிய உயர்வு கோரி, தூய்மைப்பணியாளர்கள் முதல் ஆசிரியர்கள் வரை போராட்டம் நடத்தினால் நிதியில்லை திமுக அரசு கூறுகிறது. ஆனால், ஒரே நாளில் சிறப்பு மகளிர் உரிமைத் தொகை ₹5000 வரவு வைக்க மட்டும் எப்படி நிதி வந்தது என கேள்வி எழுந்தது. இந்நிலையில், ஆதி திராவிடர் * பழங்குடியினருக்கு ஒதுக்கிய நிதியை, மகளிர் உரிமைத் திட்டத்திற்கு திமுக அரசு செலவழித்ததாக RTI தகவலை சுட்டிகாட்டி பலரும் விமர்சிக்கின்றனர்.
News February 14, 2026
கூட்டணி கட்சிகளுக்கு கூடுதல் தொகுதி ஒதுக்கும் திமுகவா?

2021-ல் கூட்டணி கட்சிகளின் 15 வேட்பாளர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது உட்பட திமுக 188 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால், இந்த முறை கூட்டணி கட்சிகள் கூடுதல் கேட்டு அழுத்தம் கொடுக்கின்றன. இந்நிலையில், 170 தொகுதிகளில் திமுக போட்டியிடும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இதனால், கூட்டணி கட்சிகளுக்கு கூடுதல் தொகுதி ஒதுக்க திமுக முடிவு எடுத்துவிட்டதா என கேள்வி எழுகிறது.
News February 14, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: மடியின்மை ▶குறள் எண்: 609▶குறள்: குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்
மடியாண்மை மாற்றக் கெடும் ▶பொருள்: தன்னை ஆட்கொண்டுள்ள சோம்பலை ஒருவன் அகற்றிவிட்டால், அவனது குடிப்பெருமைக்கும், ஆண்மைக்கும் சிறப்பு தானே வந்து சேரும்.


