News April 8, 2024
ஆபத்தான வளைவு பகுதியில் தடுப்புச் சுவர் அவசியம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குறிச்சி கோட்டையில் இருந்து சின்ன குமாரபாளையம் செல்லும் சாலை வழியை ஏராளமான பொதுமக்கள் சென்று வருகின்றன.இந்த நிலையில் ஆபத்தான வளைவான இடத்தில் தடுப்புச் சுவர் இல்லாத காரணத்தால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. எனவே இந்த பகுதியில் தடுப்புச் சுவர் மற்றும் இரவில் ஒளிரும் பட்டை அமைக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்து உள்ளனர் .
Similar News
News March 6, 2026
உடுமலை அருகே கோர விபத்து: 3 பேர் பலி

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தாந்தோணி பகுதியில் நேற்று மாலை தனியார் பேருந்தும், இருசக்கர வாகனமும் எதிர்பாராத விதமாக எதிரெதிரே மோதி விபத்து ஏற்பட்டது. இதில் இரு சக்கர வாகனத்தில் பயணித்த சிறுவன் உட்பட மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவ்விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
News March 6, 2026
அறிவித்தார் திருப்பூர் கலெக்டர்!

கோடைக்காலத்தை எதிர்கொள்ள ஊரக வளர்ச்சித் துறை மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் மனிஷ் நாரணவரே தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. நிலத்தடி நீர் உயர நடவடிக்கை எடுக்கவும், பல்லடம் 4 வழிச்சாலை பணியில் சேதமான குடிநீர் குழாய்களை உடனே மாற்றவும், கிணறுகள்-நீர்நிலைகளை தூர்வாரி பழுதான குழாய் இணைப்புகளை சரிசெய்யவும் உத்தரவிட்டார்
News March 6, 2026
திருப்பூர் மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

திருப்பூர் மாநகரில் இன்று (மார்.05) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.


