News November 13, 2024

ஆன்லைன் ரம்மியால் ஐ.டி. ஊழியர் தற்கொலை

image

ஆன்லைன் ரம்மி மற்றும் பிட்காயின் முதலீட்டில் ரூ.60 லட்சம் வரை பணத்தை இழந்த சென்னை புரசைவாக்கத்தைச் சேர்ந்த ஐ.டி. ஊழியர் சரண் குமார் (32) நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது தோழிக்கு வாட்ஸ் அப் மூலம் செய்தி அனுப்பி வைத்துவிட்டு, அவர் தற்கொலை செய்துள்ளதாகக் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும்,போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News September 11, 2025

அடையாளமே மாறும் சென்னை பூங்கா ரயில் நிலையம்

image

நாடு முழுவதும் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், 1,300-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பூங்கா ரயில் நிலையம் மறுசீரமைப்பு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுவரையில் 85 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.சென்னை சென்ட்ரலில் உள்ள இந்த பூங்கா ரயில் நிலையம் ரூ.10.68 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைப்பு செய்யப்பட்டு வருகிறது.

News September 10, 2025

கொடி கம்பங்களை அகற்ற நீதிமன்றம் உத்தரவு

image

சென்னையில் வரும் 14-ஆம் தேதிக்குள் கட்சி கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் கொடிக்கம்பங்களை கட்சிகள் அகற்ற தவறினால் மாநகராட்சி ஊழியர்கள் அகற்றுவார்கள். அகற்றுவதற்கான செலவுத்தொகை கட்சிகளிடம் வசூலிக்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

News September 10, 2025

வார இறுதி நாளை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள்

image

கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு வரும் வெள்ளி, சனிக்கிழமைகளில் தலா 55 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்டை நெரிசலை தவிர்க்கும் பொருட்டு www.tnstc.in அல்லது மொபைல் செயலி மூலம் முன்பதிவு செய்து கொள்ள போக்குவரத்து கழகம் கேட்டுக் கொண்டுள்ளது.

error: Content is protected !!