News November 7, 2024
ஆன்லைன் மூலம் 92 லட்சம் மோசடி செய்த 3 பேர் கைது

மதுரை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரை Online Trading-ல் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என பேஸ்புக் மூலமாக தொடர்பு கொண்டு ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி பணம் ரூ.92,16,710 ஆன்லைன் பணமோசடியில் ஈடுபட்டுள்ளனர். இதில் நாமக்கல் கணேசபுரத்தைச் சேர்ந்த நித்தீஷ்குமார், சந்திரசேகரன் மற்றும் கோயம்புத்தூர் சவுரியார்பாளையத்தைச் சேர்ந்த சுரேஷ் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
Similar News
News August 20, 2025
BREAKING: மதுரை வந்தடைந்தார் விஜய்!

மதுரை பாரப்பத்தியில் நாளை நடைபெறும் தவெக வின் இரண்டாவது மாநில மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தவெக தலைவர் விஜய் மதுரை வந்தடைந்தார். காரின் மூலம் சாலை மார்கமாக புறப்பட்டு மதுரை சிந்தாமணியில் உள்ள தனியார் ஹோட்டலுக்கு சென்றடைந்தார். தவெக தலைவர் விஜய் இரவு தனியார் ஹோட்டலில் தங்கி நாளை தவெக மாநாட்டில் கலந்து கொள்கிறார் .
News August 20, 2025
மதுரை த.வெ.க மாநாடு ஒரு பார்வை

3000 போலீசார் பாதுகாப்பு
2000 பவுன்சர்கள்
1.50 லட்சம் நாற்காலி
400 நடமாடும் கழப்பறை
உள்ளே வெளியே செல்வதற்கு 18 வழித்தடங்கள்-12 அவசர கால வழிகள்
1 லட்சம் மினரல் வாட்டர் பாட்டில்கள்
zone wise 1000 லிட்டர் குடிநீர் தொட்டி
400 மீட்டர் நீளத்திற்கு ராம்ப்வாக் மேடை
15 முதலுதவி மையங்கள்
News August 20, 2025
BREAKING: மதுரையில் 1 மணி நேரத்தில் அகற்ற உத்தரவு

மதுரையில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டிருக்கும் பிளக்ஸ், பேனர்களை ஒரு மணி நேரத்திற்குள் அகற்ற வேண்டும் என மதுரை காவல் ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. நாளை (ஆகஸ்ட்.21) தவெக மாநில மாநாடு நடைபெற உள்ள நிலையில் இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சினிமா பட வெளியீட்டின் போது வைக்கப்படும் பிரம்மாண்டமான பேனர்களால் விபத்துகள் ஏற்படுகின்றன என நீதிபதிகள் கருத்து.