News August 22, 2024

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த இளைஞர் தற்கொலை

image

ஊத்துக்கோட்டை அருகே கிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன் (32). ஓதப்பையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவர் சமீப காலமாக ஆன்லைனில் சூதாட்டம் ஆடி வந்ததாக தெரிகிறது. இதில் ரூ.2 லட்சம் வரை பணத்தை இழந்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பென்னலூர்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News December 11, 2025

திருவள்ளுர்: சுயதொழில் தொடங்க SUPER IDEA!

image

சுயதொழில் தொடங்க ஆசையா? கவலைய விடுங்க! தமிழக அரசு, மாவரைக்கும் இயந்திரம், நிலக்கடலை தோல் உரிக்கும் இயந்திரம், எண்ணெய் பிழிந்தெடுக்கும் செக்கு இயந்திரம் உட்பட பல்வேறு இயந்திரகளை வாங்குவதற்கு, உழவர்களுக்கு ரூ.5 லட்சம் வரை மானியம் வழங்குகிறது. விருப்பமுள்ள நபர்கள்<> ‘உழவன் செயலி’<<>> மூலமாகவோ அருகில் உள்ள வேளாண்மை துறைச் சார்ந்த அலுலவகத்தை அணுகியும் விண்ணப்பிக்கலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News December 11, 2025

திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் கவனத்திற்கு!

image

திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில், திருவள்ளூர், திருத்தணி, பொன்னேரி ஆகிய கோட்ட அலுவலகங்களில் நாளை (டிச.12) குறைதீர் கூட்டம் நடைபெறும் என ஆட்சியர் மு. பிரதாப் தெரிவித்துள்ளார். இந்தக் கூட்டத்தில் வேளாண்மை, கூட்டுறவு, மின்வாரியம் உள்ளிட்ட அனைத்துத் துறை அதிகாரிகளும் பங்கேற்பர். விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை மனுவாகவோ, நேரில் தெரிவிப்போர் உடனடித் தீர்வு காணலாம்.

News December 11, 2025

திருவள்ளூர்: ரேஷன் அட்டை குறைகளுக்கு இனி அலைய வேண்டாம்

image

திருவள்ளூர் மாவட்ட மக்களே! ரேஷன் அட்டை சம்பந்தபட்ட குறைகளுக்கு இனி அலைய வேண்டாம். புதிய ரேஷன் அட்டை விண்ணப்பிக்கவும், விண்ணப்பித்த ரேஷன் அட்டையின் நிலை குறித்து அறியவும் இந்த லிங்கை <>கிளிக் <<>>செய்து தெரிந்து கொள்ளலாம். மேலும் இதன் மூலம் புதிய உறுப்பினர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் போன்ற சேவைகளையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு உங்கள் பகுதி வட்ட வழங்கல் அலுவலரை அணுகவும். இத்தகவலை SHARE .

error: Content is protected !!