News December 26, 2025
ஆனந்த், ஆதவ் அர்ஜுனாவுக்கு மீண்டும் CBI சம்மன்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்த CBI விசாரணை சமீப நாள்களில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே தவெகவின் முக்கிய நிர்வாகிகளிடம் CBI அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக, புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனாவை டிச.29-ம் தேதி டெல்லி சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சிடிஆர் நிர்மல் குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகனுக்கும் சம்மன் அளிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 6, 2026
ரயிலில் தட்கல் டிக்கெட் ஈஸியாக புக் செய்வது எப்படி?

ரயிலில் சில நிமிடங்களில் விற்றுத் தீரும் தட்கல் டிக்கெட்களை ஈஸியாக புக் பண்ண இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க ✦அதிவேக Internet உள்ள பகுதியில் இருங்கள் ✦ACக்கு காலை 9.58க்குள்ளும், Sleeperக்கு 10.58க்குள்ளும் IRCTCயை லாகின் செய்து உள்ளே சென்றுவிடுங்க ✦Captcha Codeஐ கவனமாக Enter செய்யுங்க ✦கிரெடிட் கார்டை வைத்து புக் செய்வதை விட, IRCTC ewallet (அ) UPI மூலம் விரைவாக புக் செய்யலாம். Happy Pongal!
News January 6, 2026
வங்கதேசத்தில் நடந்தவை தவறானவை..

வங்கதேசத்தில் நடந்த சம்பவங்கள் தவறு என ஹர்பஜன் சிங் விமர்சித்துள்ளார். பல்வேறு சம்பவங்களின் காரணமாக, தங்களது T20 WC போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வங்கதேசம் கோரிக்கை வைத்துள்ளதை குறித்து ICCதான் முடிவெடுக்க வேண்டும் எனவும் அவர் கூறினார். அதே நேரத்தில், அனைவரையும் இந்தியாவிற்கு வரவேற்பதாக குறிப்பிட்ட ஹர்பஜன், வங்கதேச வீரர்கள் வருவதும், தவிர்ப்பதும் அவர்களது விருப்பம் எனவும் கூறினார்.
News January 6, 2026
பொங்கல் பரிசுத் தொகை ₹5,000 வழங்க வேண்டும்: EPS

பொங்கல் பரிசை உயர்த்தி வழங்க வேண்டும் என தொடர்ச்சியாக அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து விமர்சித்துள்ள EPS, எதிர்க்கட்சியாக இருந்தபோது பொங்கல் பரிசாக ₹5,000 கொடுக்க சொன்ன ஸ்டாலின், தற்போது ₹3,000 மட்டும் கொடுத்தது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன் மக்களுக்கு ₹5,000 வழங்க திமுக அரசு முன்வரவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.


