News April 7, 2026
ஆந்திராவின் தலைநகர் அமராவதி: அரசிதழ் வெளியீடு

ஆந்திராவின் தலைநகர் அமராவதியை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்து அரசிதழும் வெளியிட்டுள்ளது. இதனை அம்மாநில CM, DCM உள்ளிட்டோர் வரவேற்றுள்ளனர். முன்னதாக, ஆந்திரா பிரிக்கப்பட்டபோது தெலுங்கானாவின் தலைநகராக ஹைதராபாத் மாறியது. 2019-ல் YSR காங்., ஆட்சியின்போது ஆந்திராவுக்கு 3 தலைநகரங்கள் என அறிவித்தார். பின்னர், 2024-ல் TDP ஆட்சி அமைத்தவுடன் அமராவதியை தலைநகராக்க தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Similar News
News April 13, 2026
இது கிட்னி திருடும் அரசு: அண்ணாமலை

தமிழ்நாட்டில் கிட்னி திருடும் அரசு நடப்பதாக அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். ராசிபுரம் பாஜக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்த அண்ணாமலை, நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் 250 அப்பாவி மக்களின் கிட்னியை திமுகவினர் திருடியதாக சாடினார். இதுக்கு பெயர் திராவிட மாடல் அரசு அல்ல, கிட்னி திருடும் அரசு என விமர்சித்த அவர், NDA கூட்டணி ஆட்சி அமைந்தவுடன், கிட்னி திருடர்கள் சிறைக்கு செல்வார்கள் எனவும் தெரிவித்தார்.
News April 13, 2026
BREAKING: டாஸ்மாக் 3 நாட்கள் விடுமுறை

தமிழகத்தில் ஏப்.23-ம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், டாஸ்மாக் கடைகளை மூடுவது குறித்து ECI சற்றுமுன் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஏப்.21- 23-ம் தேதி இரவு வரை அனைத்து டாஸ்மாக் கடைகளும், பார்களும் கட்டாயம் மூடப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி, கள்ளச்சந்தையில் மதுபானங்களை விற்பனை செய்தால், சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.
News April 13, 2026
கழுத்தைப் பிடித்து தள்ளாத குறை.. OPS வேதனை

EPS-ஆல் தனக்கு ஏற்பட்ட அநீதிக்கு தேர்தலில் மக்கள் தீர்வு தருவார்கள் என OPS கூறியுள்ளார். அதிமுகவில் இருந்து தானாக வெளியேறவில்லை என்றும், அநியாயமாக கழுத்தைப் பிடித்து தள்ளாத குறையாக வெளியேற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி, அவரை அதிமுகவில் இருந்து EPS நீக்கியது குறிப்பிடத்தக்கது. <<-se>>#TNElection2026<<>>


