News December 11, 2025

ஆத்தூர் அருகே கோர விபத்து: சம்பவ இடத்திலேயே பலி!

image

சேலம்: தம்மம்பட்டி அருகே மேல் கணவாய்க் காடு பகுதியில் இன்று லாரி மோதியதில் பைக்கில் சென்ற இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து மல்லியகரை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News December 14, 2025

சேலம்:ரூ.5 லட்சம் இலவச மருத்துவ காப்பீடு! APPLY NOW

image

மத்திய அரசின் ஆயுஷ்மான் அட்டை வைத்திருக்கும் தகுதியுள்ள ஒவ்வொரு குடும்பமும் ஆண்டுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை பலனைப் பெறலாம். இத்திட்டத்தில் ஆயுஷ்மான் கார்டை உருவாக்க மொபைல் பிளே ஸ்டோரில் இருந்து PM-JAY பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா செயலியைப் பதிவிறக்கம் செய்யவும். மேலும் விவரங்களுக்கு <>இங்கே கிளிக்<<>> செய்யவும். இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News December 14, 2025

சங்ககிரி அருகே மினி லாரி விபத்து: 4 பேர் காயம்!

image

சங்ககிரியை அடுத்த ஆணைகவுண்டம்பட்டியைச் சேர்ந்த லாரி டிரைவர் கார்த்திக் (38). இவர் பிரபு, கருணாகரன், குமார் ஆகியோருடன் டைல்ஸ் லோடு ஏற்றிக்கொண்டு நேற்று திருப்பூர் நோக்கிச் சென்றார். சங்ககிரி கலியனூர் பைபாஸ் அருகே சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி விபத்துக்குள்ளானது. இதில் லாரியில் பயணித்த நான்கு பேரும் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 14, 2025

சேலம்: சாா்லப்பள்ளி – மங்களூரு இடையேசிறப்பு ரயில்!

image

தெலுங்கானா மாநிலம் சார்லபள்ளியில் இருந்து மங்களூரு ஜங்ஷன் சிறப்பு ரெயில் (07267) வருகிற 24-ந் தேதி சார்லபள்ளியில் இருந்து இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை வழியாக மறுநாள்
8.23 சேலம் வந்தடையும். இங்கிருந்து 8.25 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக 26-ந் தேதி காலை 6.55 மணிக்கு மங்களூரு ஜங்ஷன் சென்றடையும். இதே போல் மறு மார்க்கத்தில் 30-ந் தேதி காலை 9.55 மணிக்கு புறப்படும்.

error: Content is protected !!