News October 23, 2024

ஆத்தூர் அருகே இளைஞர் வெட்டிக்கொலை

image

ஆத்தூர் அருகே கல்பகனூர் மொரப்பங்காடு பகுதியைச் சேர்ந்த முருகன் என்ற இளைஞரை அதே பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவர் வெட்டிக்கொலை செய்தார். இச்சம்பவம் குறித்து ஆத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டார். இறந்தவர் உடலை மீட்டு ஆத்தூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News July 11, 2025

நாட்டுக்கோழி வளர்ப்பு: இலவச பயிற்சிக்கு அழைப்பு!

image

பனமரத்துப்பட்டி சந்தியூர் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகதாம்பாள் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்த இலவச திறன் மேம்பாட்டுப் பயிற்சி 26 நாட்களுக்கு நடத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்தப் பயிற்சியில் கோழி வளர்ப்பு, தீவனம் தயாரிப்பு, நோய் தடுப்பு முறைகள் குறித்து கற்றுக்கொடுக்கப்படும். மேலும் விவரங்களுக்கு 994178451 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

News July 11, 2025

ஆசிரியர் வேலை வேண்டுமா? APPLY பண்ணுங்க!

image

தமிழகத்தில் காலியாக உள்ள 1,996 ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு நேற்று (ஜூலை.10) முதல் ஆகஸ்ட்.12-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு தேர்வானது செப்.28-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உடனே விண்ணப்பிக்க இங்கு <>கிளிக் <<>>செய்யவும். ஆசிரியர் வேலை எதிர்பார்த்து காத்திருப்போருக்கு இதை SHARE பண்ணுங்க!

News July 11, 2025

சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

image

சேலம் மாவட்ட விவசாயிகள் இ- வாடகை செயலி மூலம் வேளாண்மைப் பொறியியல் துறையின் வேளாண் இயந்திரங்களை, குறைந்த வாடகைக்கு எடுத்து பயன்பெறலாம் என ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். விவசாயிகள் தங்கள் கைபேசியில் உழவர் செயலியை தரவிறக்கம் செய்து, அதில் உள்ள இ-வாடகை செயலி மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது வேளாண்மைப் பொறியியல் துறையின் <>https://mts.aed.tn.gov.in/evaadagai<<>> எனும் இணையதளத்தை அணுகலாம். தேவைப்படுவோருக்கு இதை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!