News February 17, 2026
ஆத்தூரில் வசமாக சிக்கிய வாலிபர்

ஆத்தூர் உடையார்பாளையத்தை சேர்ந்த பெண் ஆசிரியர் கடந்த 28-ம் சாலையில் நடந்து செல்லும்போது பைக்கில் வந்த வாலிபர் கழுத்தில் இருந்த நகையை திருடி சென்றுள்ளார். இதுகுறித்து நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில், பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த சூர்யா 19 என்பது தெரியவந்து. இதனையடுத்து சூர்யா மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
Similar News
News February 18, 2026
சேலம்: பட்டாவில் பெயர் மாற்றுவது எப்படி?

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க.
News February 18, 2026
BREAKING: சேலத்தில் இளம்பெண் தற்கொலை

சேலத்தைச் சேர்ந்த சண்முகபிரியா என்பவர், கௌதம் என்பவரை காதலித்து வந்தார். பின், கௌதமின் நடத்தை சரியில்லாத காரணத்தால் சண்முகபிரியா அவருடன் பழகுவதை துண்டித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த கௌதம், தன்னைத் திருமணம் செய்யாவிட்டால் போட்டோக்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டி வந்துள்ளார். இதில் மனவேதனை அடைந்த சண்முகபிரியா கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்டார்.
News February 18, 2026
சேலம் அருகே விபத்து

சேலம் அருகே வீராணம் அடுத்த குப்பனூர் காட்டுவளவு பகுதியைச் சேர்ந்தவர் சின்னசாமி. இவர் நேற்று முன்தினம் அப்பகுதியில் சாலையை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியாக வந்த டூவீலர் அவர் மீது மோதியது. அப்பகுதியினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வீராணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


