News September 10, 2025
ஆதி கும்பேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் தேதி?

மகாமக திருவிழா தொடர்புடைய கும்பகோணம் ஆதிகும்பேசுவரசுவாமி திருக்கோயிலுக்கு டிசம்பர் மாதம் 1ஆம் தேதி திங்கள் கிழமை சுபயோக சுபதினத்தில் காலை 6.00 மணி முதல் 7.30 மணிக்குள் விருச்சிக லக்னத்தில் குடமுழுக்கு நடத்துவதற்கு திருக்கோயில் செயல் அலுவலர் முருகன், அறங்காவலர் குழுத்தலைவர் மற்றும் அறங்காவலர்களால் நாள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Similar News
News September 10, 2025
தஞ்சை: வெடிகுண்டு சம்பவத்தில் 2 பேர் கைது

தஞ்சை மாவட்டம் ஆடுதுறை பேரூராட்சி அலுவலகத்தில் வெடிகுண்டு வீசி பேரூராட்சி தலைவர் ம.க.ஸ்டாலின் கொலை முயற்சி வழக்கில், திருவிடைமருதூர் கீழதூண்டி விநாயகன் பேட்டையை சேர்ந்த பிரபல ரவுடி லாலி மணிகண்டனின், அண்ணன் மகேஷ் மற்றும் இதே பகுதியை சேர்ந்த மருதுபாண்டி ஆகிய இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ள மற்ற குற்றவாளிகள் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
News September 10, 2025
தஞ்சையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

தஞ்சாவூர் மாவட்டம் மணக்கரம்பை ஊராட்சி ஆதிதிராவிடர் நல அரசினர் தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவ-மாணவியர்களின் கல்வித்தரம் குறித்து தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம், இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் அரசு அதிகாரிகள் பள்ளி ஆசிரியை ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் உள்ளனர்.
News September 10, 2025
கிருஷ்ணாபுரத்தில் அமைச்சர் கோவி செழியன் பேட்டி

ஆளுநர் ஒப்புதல் தரவேண்டிய, கலைஞர் பல்கலைக்கழகத்திற்கு, ஒப்புதல் தராமல், பல மாதங்கள் கிடப்பில் போட்டு, அதனை குடியரசு தலைவருக்கு அனுப்பியிருப்பதன் தொடர்ந்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழகத்தையும், தமிழ் மக்களையும் வஞ்சிக்கிறார் என்பதும், தமிழக உயர்கல்வி முன்னேற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் முட்டுக்கட்டை போடுகிறார் என்பது தெளிவாக தெரிகிறது என இன்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் பேட்டி.