News April 17, 2024
ஆண்டிபட்டி அருகே ஒருவர் பலி

முத்தாலம்பாறையைச் சேர்ந்தவர் தனிக்கொடி. இவர் வீட்டின் அருகே தனி தகர செட்டில் தங்கி இருந்தார். கடந்த 14 ஆம் தேதி அவர் வீட்டை விட்டு வெளியே வந்த அவர் தடுமாறி கீழே விழுந்து பாறையில் மோதியதில் தலையில் காயமடைந்தார். மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது குறித்து கடமலைக்குண்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 29, 2025
தேனி: HI சொன்னா- உங்க வங்கி விபரங்கள் Whatsapp-ல!

தேனி மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க…
News December 29, 2025
தேனி: மனைவி குறித்து தவறாக பேச்சு – இளைஞருக்கு கத்திகுத்து

கம்பம் பகுதியை சேர்ந்தவர் விக்ரமன் (25). இவரது மனைவியை அதே பகுதியில் வசிக்கும் அசோக் (20) என்பவர் தவறாக பேசியுள்ளார். இதுகுறித்து விக்ரமன் உத்தமபாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் இருவரையும் எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதனால் ஆத்திரமடைந்த அசோக், விக்ரமனின் மார்பில் கத்தியால் குத்தினார். இதில் காயமடைந்த விக்ரமன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அசோக்கை போலீசார் கைது செய்தனர்.
News December 29, 2025
தேனி: டூவீலர் மோதி மூதாட்டி பரிதாப பலி!

பெரியகுளம் பகுதியை சேர்ந்தவர் பிச்சைமணி (60). இவர் கடந்த 2 நாட்களுக்கு முன் ஜல்லிபட்டி சாலையை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியாக வந்த டூவீலர் பிச்சைமணி மீது மோதியதில் அவர் பலத்த காயமடைந்து பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தென்கரை போலீஸார் விபத்து ஏற்படுத்திய சந்தீஷ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


